செய்திகள் :

மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

post image

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் கூறியதாவது,

பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின்படி, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை குடும்ப வருமானம் கொண்ட 15 - 20 லட்சம் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பி தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை(CAG) அம்பலப்படுத்தப்படும் மோசடிகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்குவதாக அரவிந்த் கேஜரிவால் மூன்று வருடங்களாக அளித்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவார் என்று அவர் கூற வேண்டும்.

தில்லி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டம் பிரதமர் மோடியின் உறுதிமொழியாகும். இது நிறைவேற்றப்படும் என்று ஆத் ஆத்மி தலைவர்களுக்கும் கூடத் தெரியும் என்று அவர் கூறினார். மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையில் போலி பெயர்களைத் தவிர்ப்பதற்காக பல நிலை சரிபார்ப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி, மகளிர் திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு ஒரு ஐடி தளம் தயாராக உள்ளதாகவும் தில்லி அரசின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய சீனியர் ஆண்கள் தேசிய அணியின் தலைமை பயிற்சி... மேலும் பார்க்க

காங்கிரஸ் திவாலாகி விட்டது: ஜெ.பி. நட்டா

காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக திவாலாகி விட்டதாக பாஜக ஜெ.பி. நட்டா கூறினார்.இமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியதாவது, `... மேலும் பார்க்க

குஜராத் பேரவைத் தேர்தல்: ராகுல் காந்தி அகமதாபாத் பயணம்!

குஜராத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலை மையப்படுத்தி ராகுல் காந்தி அகமதாபாத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.2027 ஆம் ஆண்டு குஜராத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை மையப்படுத்தி கா... மேலும் பார்க்க

ஒடிசா: பள்ளிகளைக் காவிமயமாக்கும் பாஜக அரசு!

ஒடிசாவில் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் காவிநிற வர்ணம் பூச பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காவி நிறம் பூசுவது தொடர்பாக, அதற்கான மாதிரிப் படத்துடன் ஒடிசா மாநில மாவட்டங்களின் ஆட்சியர்களுக்... மேலும் பார்க்க

கர்நாடக பாடகியை கரம்பிடித்தார் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் பாரம்பரிய முறையில் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் திர... மேலும் பார்க்க

ஓநாய் தாக்குதலுக்கு அடுத்ததாக நாய்களிடம் சிக்கிய உ.பி.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சிறுத்தை, யானை, ஓநாய் முதலான விலங்குகளின் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது நாய்களின் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்வரையில்... மேலும் பார்க்க