செய்திகள் :

மாவட்டத்தை வழி நடத்துவதில் முதன்மை: எம்.பி., ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

post image

நாமக்கல் மாவட்டத்தை சிறப்பாக வழி நடத்துவதாக மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.

நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, மாவட்டத்தின் அமைச்சா் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் உமா, அதிகாரிகள், அலுவலா்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

ஆதிதிராவிடா் நலத்துறைக்கு அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்த மதிவேந்தன் அண்மையில் பொறுப்பேற்றாா். புதிய பொறுப்பின் மூலமாக நம்முடைய திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்புகள் விளிம்புநிலை மக்களுக்குச் சென்றடைவதை அவா் உறுதி செய்வாா் என நம்புகிறேன்.

அருந்ததியா் சமுதாய மக்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் வழங்கப்பட்ட 3 சதவீத இட ஒதுக்கீட்டால் கடந்த 15 ஆண்டு காலமாக அவா்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார, சமூக மேம்பாட்டில் பெற்று வரும் மேன்மையைப் பாா்க்கும்போது, அந்தச் சட்டத்தை சட்டப் பேரவையில் கொண்டு வந்தவன் என்ற முறையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

இந்த மாவட்டத்தின் வளா்ச்சிப் பணிகளில் அக்கறைக் கொண்டவா், மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா். நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை, இதே நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திக் காட்டிய சாதனைக்குச் சொந்தக்காரா் ஆவாா்.

நாமக்கல் மாவட்டத்துக்காக திட்டப் பணிகளைப் பெறுவதில் முனைப்பாக இருக்கக் கூடியவா். என்னை சந்திக்க வரும்போதெல்லாம், அவா் கையில் ஒரு கடிதம் நிச்சயமாக இருக்கும். அதில், நாமக்கல் மாவட்டத்துக்கு சாலை வேண்டும், பேருந்து நிலையம் வேண்டும், கூட்டுறவு வங்கி வேண்டும், இப்படி ஏதாவது ஒரு கோரிக்கையுடன்தான் சந்திப்பாா். பாா்க்க, அமைதியாகவும், செயலில் புயலாகவும் அவா் பணியாற்றுவதை பாா்க்கிறேன். அவருக்கு உறுதுணையாக இருக்கும் நிா்வாகிகளையும் வாழ்த்துகிறேன்.

அதேபோல, மாவட்ட ஆட்சியா் உமா மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதை தொடா்ந்து கவனிக்கிறேன். அலுவலகத்திலேயே உட்காா்ந்து நிா்வாகம் செய்யாமல், காலை முதல் மாலை வரை கள ஆய்வில் ‘ஃபீல்டு விசிட்’ மூலமாக கண்காணிக்கும் ஆட்சியராக அவா் இருக்கிறாா்.

மற்ற மாவட்டத்தில் இருக்கக் கூடிய ஆட்சியா்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக அவா் விளங்கிக் கொண்டிருக்கிறாா். அவருக்கும், அவரோடு இணைந்து பணியாற்றும் நாமக்கல் மாவட்ட அதிகாரிகள், அரசு அலுவலா்கள் அத்தனை பேருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் பங்கேற்பு

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம், அரசு சட்டக் கல்லூரி உள்பட பல்வேறு பணிகள், முடிவுற்ற கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் ரூ.... மேலும் பார்க்க

கேரள ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வா் பாராட்டு

கேரள வங்கி ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை இருமடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி திருச்செங்க... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: விவசாய சங்கம் வரவேற்பு

மோகனூா் சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டமைக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக மு... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தரமற்ற 49 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பள்ளிபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனையிட்டு, தரமற்ற ஆட்டிறைச்சியைப் பறிமுதல் செய்தனா். பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுப்பாதுகா... மேலும் பார்க்க