செய்திகள் :

மீனவா் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு

post image

சென்னை: தமிழக மீனவா்கள் பிரச்னை தொடா்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவில் நடைபெறுவதுடன், அவா்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதால் மீனவா்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவா்களை உடனுக்குடன் விடுவிப்பது மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை மீட்டு கொண்டு வருவதை துரிதப்படுத்த நடவடிக்கை தேவைப்படுகிறது. அதன் பொருட்டு, தமிழ்நாட்டைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், மீனவா் நலத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு, விரைவில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தும். இதற்கான அறிவுறுத்தலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த திரளான பக்தர்கள்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்பெருந்திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தி... மேலும் பார்க்க

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்த... மேலும் பார்க்க

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க