செய்திகள் :

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

post image

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.

ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று காவிரி நீரை திறந்து வைத்தார்.

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை கடந்து இன்று திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. முக்கொம்புக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

முன்னதாக முக்கொம்பு சுற்றுலா தல நுழைவு வாயிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். முக்கொம்பு மேலணையில் உள்ள காவிரி தாய் சிலைக்கும் கரிகாலன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவிரிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். அதனையடுத்து வாழ்த்து முழக்கங்கள் முழங்க மலர்கள் தூவியும் நெல்மணிகள் தூவியும் காவிரி நீரை வரவேற்றனர்.

ஜூன் 12-ஆம் தேதியான சரியான தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுடன் பேசி தொடர்ந்து தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நெல்லுக்கு குவின்டாலுக்கு 2500 ரூபாய் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சிதான். ஆனால் அது குறைவான தொகையாக உள்ளது.

அதனை கூடுதலாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் மட்டும் தூர் வாரும் பணிகள் 70% நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட சிறப்பாக தூர்வாரும் பணிகள் அனைத்தும் நடந்துள்ளது.

கடைமடை வரை தண்ணீர் வந்து சேரும் என்கிற நம்பிக்கை உள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், த.மா.க விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

கடலூர் மாவட்டம், பார்வதிபுரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிக்கையில், ... மேலும் பார்க்க

கள் இறக்கும் போராட்டம்: பனைமரம் ஏறிய சீமான்

கள் இயக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் ... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடை... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு விருது விழா! இறுதிக் கட்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு!

தமிழகத்தில் 39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளி... மேலும் பார்க்க

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.கோவை, தெலுங்குபா... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 6,501 கன அடியாக குறைந்துள்ளது.காவிரியில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நேற்று காலை வினாடிக்கு 7507 கன அடி வ... மேலும் பார்க்க