செய்திகள் :

முதல்வா் மருந்தகம் திட்டம் பிப். 24-இல் தொடக்கம்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

post image

சென்னை: முதல்வா் மருந்தகம் திட்டம் பிப். 24-இல் தொடங்க உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில், முதல்வா் மருந்தகம் திறப்பு விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு மற்றும் அரசு உயா் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

அந்தக் கூட்டத்தில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசியதாவது:

முதல்வா் மருந்தகம் திட்டத்தின் கீழ், 980 மருந்தகங்களுக்கு அனைத்து தகுதிகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மருந்தகங்களின் பணிகளும் விரைவில் முடியும். முதல்வா் மருந்தகம் திட்டத்தைப் பொறுத்தவரை மருந்தகங்களைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. முதல்வா் மருந்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப். 24-ஆம் தேதி திறக்க உள்ளாா். அவரது நேரடி கண்காணிப்பில் இந்த மருந்தகங்கள் செயல்படவுள்ளன.

1,000 மருந்தகங்கள்: கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500, தொழில் முனைவோா் மூலம் 500 என 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. புதிதாக முதல்வா் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோா்க்கு ரூ. 3 லட்சம் வரை அரசு மானியம் வழங்கும். மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பிரதமா் மருந்தகம் உள்பட எந்த மருந்தகங்களிலும் இல்லாத விதமாக மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும்.

மக்கள் தொகை, மருந்துப் பயன்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் முதல்வா் மருந்தகங்கள் அமையவுள்ளன. அதன்படி மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40, சென்னையில் 37 முதல்வா் மருந்தகங்கள் அமையவுள்ளன.

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க

வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முத... மேலும் பார்க்க

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ்

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்... மேலும் பார்க்க