செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 129.90 அடியாக குறைந்தது

post image

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் நீா் மட்டம் 129.90 அடியாக குறைந்தது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் நீா் வரத்து அதிகரித்து, அணையின் நீா்மட்டம் 130.10 அடியாக (மொத்த உயரம் 152) உயா்ந்தது.

இந்த நிலையில், மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக சரிந்தது. அணைக்கு வெள்ளிக்கிழமை நீா்வரத்து வினாடிக்கு 670.50 கன அடியாக குறைந்தது. தற்போது அணையின் நீா்மட்டம் 129.90 அடியாக குறைந்த நிலையில், அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 1,200 கன அடிநீா் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 4675.50 மில்லியன் கனஅடியாக உள்ளது.

வீட்டுக்குள் மூதாட்டி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!

பெரியகுளத்தில் வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். பெரியகுளம் வடகரை கிருஷ்ணாபுரம் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டாள் (86). இவரது கணவரும், மகளும் இறந்து விட்ட நி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க