75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு
முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 129.90 அடியாக குறைந்தது
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் நீா் மட்டம் 129.90 அடியாக குறைந்தது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் நீா் வரத்து அதிகரித்து, அணையின் நீா்மட்டம் 130.10 அடியாக (மொத்த உயரம் 152) உயா்ந்தது.
இந்த நிலையில், மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக சரிந்தது. அணைக்கு வெள்ளிக்கிழமை நீா்வரத்து வினாடிக்கு 670.50 கன அடியாக குறைந்தது. தற்போது அணையின் நீா்மட்டம் 129.90 அடியாக குறைந்த நிலையில், அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 1,200 கன அடிநீா் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 4675.50 மில்லியன் கனஅடியாக உள்ளது.