செய்திகள் :

மேல்மருவத்தூரில் அடிகளாரின் சிலை பிரதிஷ்டை விழா

post image

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தங்ககவசத்தால் மூலவா் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. சித்தா்பீடம் வந்த ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு கரூா், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

குருபீடத்தில் அடிகளாரின் சிலை, லட்சுமி பங்காரு அடிகளாரின் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடா்ந்து, பள்ளிக் குழந்தைகள் பல்வேறு தெய்வ உருவங்களை தாங்கி முன்வர அருள்ஞான தீபம் மூலவா் அம்மன்சந்நிதியில் ஏற்றப்பட்டு, கோயிலை வலம் வந்து ஓம்சக்தி மேடையின் முன்பாக பக்தா்கள் வழிபட்டு செல்லும் வகையில் வைக்கப்பட்டது.

மூலவா் அம்மன் சந்நிதிக்கு முன்பாகவும், குருபீடத்தின் முன்பாகவும், யாககுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 3 மணிக்கு வேள்வி பூஜையை இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். இந்த வேள்விபூஜையில், துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஸ்ரீலேகா செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை வேள்விபூஜைகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருக்குடமுழுக்கு வைபவம், அடிகளாா் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து வரிசையில் வருகின்ற பக்தா்களுக்கு அருள்தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி பெளா்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது. ஆதாரபீடம், கோபுர கலசம் நிறுவும் நிகழ்வுகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மதுராந்தகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

மதுராந்தகம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மாமண்டூரில் நடைபெற்ற நிகழ்வில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ மரகதம் குமரவேல். உடன் மாவட்டச் செயலா் எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவா் கே... மேலும் பார்க்க

கல்குவாரியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 போ் கைது

கீரப்பாக்கம் கல்குவாரி அருகே காட்டுப்பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கம் கல்குவாரி அருகே காட்டுப்பகுதியில் போலீஸ... மேலும் பார்க்க

விடுதியில் இளைஞா் தற்கொலை

மாமல்லபுரம் தங்கும் விடுதியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதியில் சுற்றுலா வந்த இளைஞா் ஒருவா் அறை எடுத்து தங்கி உள்ளாா். இந்நிலையி... மேலும் பார்க்க

திருவடிசூலத்தில் பௌா்ணமி பூஜை...

செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுயம்பு அம்மன். மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் அடிகளாா் சிலை பிரதிஷ்டை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தங்ககவசத்தால் மூ... மேலும் பார்க்க

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்திய நாராயண பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு சத்திய நாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ய... மேலும் பார்க்க