செய்திகள் :

மோடி போன்கால்: 'இனி இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்காது; பாக். உடன் போரில்லை' - ட்ரம்ப்

post image

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

மோடி - ட்ரம்ப் போன்கால்

இந்த நிலையில், நேற்று இந்திய அமெரிக்க பிசினஸ்மேன் நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இப்போது தான் உங்கள் பிரதமரிடம் பேசினேன். நாங்கள் வர்த்தகம் குறித்து உரையாடினோம். இன்னும் நிறைய விஷயங்கள் குறித்து பேசினோம். ஆனால், முக்கியமாக, வர்த்தகத்தைப் பற்றியே பேசினோம். அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.

மோடி - புதின்
மோடி - புதின்

எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. அவர் இனி ரஷ்யாவில் இருந்து அதிக எண்ணெய் வாங்கப்போவதில்லை.

அவருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தைக் காணவேண்டும்.

தொலைபேசி உரையாடலின்போது, போர் குறித்தும் கொஞ்சம் பேசினோம். வர்த்தகம் பற்றிப் பேசியதால் போர் குறித்தும் பேசமுடிந்தது. இனி இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே போர் இருக்காது. இது மிக மிக நல்ல விஷயம்" என்று‌ பேசியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தத்திற்குப் பிறகு, வர்த்தகத்தைக் காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக பலமுறை ட்ரம்ப் கூறிவிட்டார். இப்போது, அதே மாதிரியான கூற்றை தான் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும்?

சபரிமலையில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் DGP கூறுவது என்ன?

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று சபரிமலையில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதற்காக அவர் நேற்று கேரளா வந்தார். இன்று காலை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பத்தனம்திட்டா க... மேலும் பார்க்க

"சித்தராமையா அரசியல் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் உள்ளார்" - மகன் பேச்சால் சர்ச்சை; பின்னணி என்ன?

கர்நாடகா முதலமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா காங்க... மேலும் பார்க்க

``நெல் மூட்டைகள் தேக்கத்துக்கு மத்திய அரசு தான் காரணம்” - அமைச்சர் சக்கரபாணி

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கு, அருள்மொழிப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ... மேலும் பார்க்க

"காங்கிரஸ் கட்சியை மதிப்பவர்கள் மட்டுமே முதலவராக முடியும்" - மாணிக்கம் தாகூர்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், `வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்லவில்லையே?’ என்ற கேள்விக்கு, ”இதுகுறித்து ரயில்வேத்துறை அமைச்ச... மேலும் பார்க்க