செய்திகள் :

'ரஜினி சார் நம்பி வந்தால் நம்பிக்கையை காப்பாற்றுவேன்' - மாரி செல்வராஜ்

post image

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில்  உருவான ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ், நடிகர்கள் பசுபதி, அமீர், ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று கோவையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.

பைசன் காளமாடன்

அப்போது மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னுடைய படங்கள் அனைத்தும் மக்களை நம்பி எடுக்கப்பட்டவை. அந்த வகையில் இந்த படத்துக்கும் மக்கள் ஆதரவு நன்றாக இருப்பது மகிழ்ச்சி.

பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறார்கள். என்னுடைய படங்கள் இவ்வாறு இருக்கும், என்னுடன் வேலை செய்வது இவ்வாறு தான் இருக்கும் என்று என்னை நம்பி அவர் வந்தால் அவருடைய நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். சமூகத்தில் ஜாதிகளை மாத்திரை போடுவது போன்று காலி செய்துவிட முடியாது.

இயக்குநர் மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

ஜாதி என்பது தமிழ்நாட்டில் ஏன் இந்தியா முழுவதும் ஒரு வாழ்வியல் முறையாக உள்ளது. நான் மட்டுமல்ல அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலரும் ஜாதிக்கு எதிராக வேலை செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

சினிமாவிலும் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறோம்.” என்றவரிடம், ‘உங்களின் அனைத்து படங்களிலும் ஒரு விலங்கை குறிப்பிட்டு, அதனை கொல்வது போன்று படம் எடுக்கப்படுவது’ குறித்து செய்தியாளர்கள் கேள்வி  எழுப்பினர். அதற்கு மாரி செல்வராஜ், “மனிதனை கொல்வதற்கு பயமாக உள்ளது.

மாரி செல்வராஜ்

வணிக ரீதியான படங்களில் எவ்வளவு மனிதர்களை கொன்றாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். நான் சமூகத்தையும், உண்மையையும் வைத்து படம் எடுக்கிறேன். எனவே மனிதர்கள் இறப்பது போல படம் எடுத்தால் அது என்னுடைய பொறுப்பு. அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.” என்றார்.

Vishnu Vishal: `` 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு!" - விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்' திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. ஷ்ரதா ஶ்ரீநாத், செல்வராகவன் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. வி... மேலும் பார்க்க

"காட்சிகளுக்கு உயிர் சேர்த்தவர்; மறைவுச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது"- சேரன் இரங்கல்

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று (அக்டோபர் 23) காலமானார்.இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசைய... மேலும் பார்க்க

``மகனுக்காக நாடக மன்றமே ஆரம்பிச்ச மனோரமா ஆனால்" - நினைவுகள் பகிரும் மனோரமாவின் மேனேஜர்

தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்ததுடன், நகைச்சுவை, குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து சகாப்தமாய் திகழ்ந்தவர் 'ஆச்சி' மனோரமா. அவரின் மகன் பூபதி (வயது 70), உடல் நலக்குறைவால் இன்று காலமானா... மேலும் பார்க்க

Bison: ``பல காட்சிகளில் என்னைப் பொருத்திப் பார்த்தேன்" - மாரி செல்வராஜை பாராட்டிய அண்ணாமலை

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், `அருவி' மதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான `பைசன் காளமாடன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி... மேலும் பார்க்க

Bison: "மெய்சிலிர்த்து கண்ணீரை வரவழைத்தது"- 'பைசன்'படத்தைப் பாராட்டிய சேரன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது... மேலும் பார்க்க

தேவாவின் சகோதரர் இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.ஆரம்ப காலகட்டத்தில் சபேஷ் தனது இன்னொரு சகோதரர் முரளியுடன் சேர்ந்து தேவாவுடன் உதவி இசையமைப்பாளராகப் பல படங்களில் இணைந்து ... மேலும் பார்க்க