செய்திகள் :

ரஷிய ராணுவத்துக்கு வெடிகுண்டு பார்சல்களை அனுப்பிய நபர் கைது!

post image

ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரஷிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷிய போரைத் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவி செய்ய ஒத்துழைப்பு அளித்த நூற்றுக்கணக்கான குடிமக்களை ரஷியா கைது செய்தது.

இந்த நிலையில், 22 வயது ரஷிய இளைஞர் ஒருவர் ராணுவத்தினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ததற்கான காரணத்தை ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த நபர் மாஸ்கோ, வோரோனெஸ், கிரஸ்னோடர், சரடோவ் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு 5 வெடிகுண்டு பார்சல்களை அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க | சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அந்தப் பார்சல்கள் விமான நிலைய சோதனையில் சிக்கியது. பார்சல்களை சோதித்ததில், வாசனைத் திரவியங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு அதனுள் வெடிபொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அனைத்து வெடிபொருள்களையும் செயலிழக்க வைத்ததாக ரஷிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைன் சிறப்புப் படையினர் அதிக பணம் தருவதாகக் கூறி அந்த நபரை இவ்வாறு செய்ய வைத்ததாகவும், பார்சல்களை அனுப்பிய பின்னர் அவர்கள் தொடர்பைத் துண்டித்துக் கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து உக்ரைன் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த காலங்களில் ரஷியாவின் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துள்ளது.

உக்ரைனுக்காக வேலை பார்ப்பதாகச் சந்தேகிக்கப்படும் அனைவரையும் ரஷிய பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாகக் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் போா் நிறுத்தத்துக்குத் தயாா்! -ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 10 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வாவில் உள்ள எல்லைப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில்நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் பலியாகினர். பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் செ... மேலும் பார்க்க

அமெரிக்க விஸ்கிகளுக்கு வரிவிதித்தால் ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரி! -டிரம்ப்

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.... மேலும் பார்க்க

காலநிலை உச்சி மாநாடு: சாலை அமைக்க அமேசான் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்!

கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசான் காடுகளில் 1000 அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது.பிரேசிலில் நடைபெறவுள்ள காலநிலை உச்சி மாநாட்டுக்கு சாலை அமைப்பதற்காக ஆயிரத்துக்கு... மேலும் பார்க்க

ரமலான்: 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் அல்ஜீரியாவின் தேவைக்கு ஏற்ப 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக, அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.ஞாயிறன்று நடைபெற்ற ஆ... மேலும் பார்க்க

கனடாவின் பிரதமராக மார்க் கார்னி நாளை பதவியேற்பு!

கனடாவின் 24-ஆவது பிரதமராக மார்க் கார்னி (59) நாளை(மார்ச் 14) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு விழா தொடர்பான அறிவிப்பை ஆளுநர் ஜெனரல் மேரி சைமன் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. முன... மேலும் பார்க்க