செய்திகள் :

ராஜபாளையம்: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர்களது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறது.

ஊருக்கு வெளியே கிடை போட்டுப் பராமரித்து வந்த நிலையில், தற்போது மழைக்காலம் என்பதால் ஊருக்குள் உள்ள தனது சொந்த நிலத்தில் கிடை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.

தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது.

இடிந்து விழுந்த சுவர்

மழை பெய்த போது முருகன் ஆடுகளை பராமரித்து வந்த இடத்தின் அருகே இருந்த அரிசி ஆலையின் மதில் சுவர் இடிந்து ஆடுகளின் மேல் விழுந்தது.

இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. தகவல் அறிந்து வந்த தளவாய்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் காவல்துறை!

வரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்க... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி திண்டுக்கல் சிறையில் அடைத்த மறுநாளே மரணம் - பின்னனி என்ன?

கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனைக் கடத்தி ஒரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார... மேலும் பார்க்க

சபரிமலை: தங்கம் மோசடி வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றி நள்ளிரவில் கைது; 10 மணி நேரம் விசாரணை!

சபரிமலை தங்க கவசம்சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் துவாரபாலகர் சிலை ஆகியவை செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1999-ம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா தங்கம் பதிக்க சுமார் 30 கிலோ தங்கம் வழங்க... மேலும் பார்க்க

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: சி.பி.ஐ விசாரணை இன்று முதல் தொடக்கம் - பின்னணி என்ன?

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்நிலையில், தமிழக அரசு ஓய்வு பெற்ற உ... மேலும் பார்க்க

`ரூ.8 லட்சம்' கேட்ட DIG வீட்டில், ரூ.5 கோடி, 1.5 கிலோ தங்கம், சொகுசு கார்கள் பறிமுதல் - CBI அதிரடி

பஞ்சாப் டி.ஐ.ஜி ஹர்சரன் சிங்பஞ்சாப்பில் உள்ள ரோபர் மண்டலத்தில் டி.ஐ.ஜியாக இருப்பவர் ஹர்சரன் சிங். இவர் பதேகர் சாஹிப் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஆகாஷ் என்பவரிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டார... மேலும் பார்க்க

ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி,கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். ... மேலும் பார்க்க