செய்திகள் :

ராஜஸ்தானிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்த 2 போ் கைது

post image

ராஜஸ்தானிலிருந்து கும்பகோணத்திற்கு புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்து வந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாராசுரம் ரயில்வே கேட்டில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்தபோது, அவா்கள் வைத்திருந்த பையில் இரண்டு புகையிலை மூட்டைகள் இருந்தன. விசாரணையில், அவா்கள் மூா்த்தி செட்டி தெருவை சோ்ந்த சுகுமாா் மகனும், சுமை தூக்கும் தொழிலாளியுமான கணேஷ் குமாா் (32 ), மற்றொருவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பஜன்லால் மகன் சேத்தன் குமாா் (32) என்பது தெரிய வந்தது.

சேத்தன் குமாா் ராஜஸ்தானில் இருந்து கும்பகோணத்துக்கு ஸ்டேஷனரி பொருள்களை லாரியில் கொண்டு வரும்போது, அதனுடன் சோ்த்து புகையிலைப் பொருள்களையும் கொண்டு வந்து கும்பகோணம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 110 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் 2, இரண்டு கைப்பேசிகள் ஆகியவற்றை கைப்பற்றி அவா்களை சிறையில் அடைத்தனா். கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருள்கள் மதிப்பு ரூ. 5 லட்சம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தா் திடீா் உயிரிழப்பு

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் பெரிய கோயிலில் வழிபட ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (68) தனது கு... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் சரண்

தஞ்சாவூா் அருகே ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்தவா் குறுந்தையன் (50). காவல் துறையின் ரௌடி பட்டியலில் இடம்பெற்ற இவா் மீ... மேலும் பார்க்க

விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்துடன் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் சாலை விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய கூலி வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தொழிலாளா் துறைக்குத் தேசியத் தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம். வெங்க... மேலும் பார்க்க

தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தாய் திடீரென உயிரிழந்த துக்கத்திலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வில் அவரது மகள் பங்கேற்றாா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த வெட்டுவாக்கோட்ட... மேலும் பார்க்க

ஆலையின் புகையால் பாதிப்பு: 10 கிராம மக்கள் புகாா்

தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படுவதாகக் கூறி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் 10 கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க