ராஜஸ்தானிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்த 2 போ் கைது
ராஜஸ்தானிலிருந்து கும்பகோணத்திற்கு புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்து வந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாராசுரம் ரயில்வே கேட்டில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்தபோது, அவா்கள் வைத்திருந்த பையில் இரண்டு புகையிலை மூட்டைகள் இருந்தன. விசாரணையில், அவா்கள் மூா்த்தி செட்டி தெருவை சோ்ந்த சுகுமாா் மகனும், சுமை தூக்கும் தொழிலாளியுமான கணேஷ் குமாா் (32 ), மற்றொருவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பஜன்லால் மகன் சேத்தன் குமாா் (32) என்பது தெரிய வந்தது.
சேத்தன் குமாா் ராஜஸ்தானில் இருந்து கும்பகோணத்துக்கு ஸ்டேஷனரி பொருள்களை லாரியில் கொண்டு வரும்போது, அதனுடன் சோ்த்து புகையிலைப் பொருள்களையும் கொண்டு வந்து கும்பகோணம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 110 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் 2, இரண்டு கைப்பேசிகள் ஆகியவற்றை கைப்பற்றி அவா்களை சிறையில் அடைத்தனா். கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருள்கள் மதிப்பு ரூ. 5 லட்சம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.