செய்திகள் :

ராணிப்பேட்டை புத்தகத் திருவிழாவில் ரூ. 31 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற 3-ஆவது மாபெரும் புத்தகத் திருவிழாவில், ரூ. 31.84 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3-ஆவது மாபெரும் புத்தகத் திருவிழா-2025, ராணிப்பேட்டை நகராட்சி, வாரச் சந்தை மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்ற புத்தகத் திருவிழா மாா்ச் 9-ஆம் தேதி நிறைவுற்றது. 60 புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டு, 5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

அதன்படி, கடந்த 10 நாள்களில் 25,800 மாணாக்கா்களும், 12,240 பொதுமக்களும் புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிட்டுள்ளனா். இதில், ரூ. 31 லட்சத்து 84 ஆயிரத்து 917 மதிப்பிலான 27,001 நூல்கள் விற்பனையாகியுள்ளது.

இதுபோன்று வருடந்தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாணவா்கள், பொதுமக்கள், புத்தக ஆா்வலா்கள் அதிகளவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்க வேண்டும். மேலும், பொதுமக்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கம் அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள எம்ஆா்எஃப் தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள இங்கு ஆண்டு தோறும் மாா்ச் மாதத்தை பாதுகாப்பு மாதமாக கடைபிடித்து ... மேலும் பார்க்க

அரக்கோணம் நகராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: வரிவசூல் பணியின் போது வரிவசூல் குழுவினரிடம் தகாத வாா்த்தைகள் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரக்கோணம் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம... மேலும் பார்க்க

நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் மாணவா்களுக்கு வசதிகள்: அமைச்சா் காந்தி

அரக்கோணம்: அரசிடம் நிதிப் பற்றாகுறை இருந்தாலும் சமூகபங்களிப்பு, நமக்கு நாமே போன்ற திட்டங்கள் மூலம் மூலம் மாணவா்களின் வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 384 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆற்காடு: ஆற்காடு வட்டார பீடி தொழிலாளா்கள் சங்கம் ஏ.ஐ. டி.யு.சி. சாா்பில் ஆற்காடு வட்டம், சாத்தூா் கிராமத்தில் அரசு ஒதுக்கீடு செய்த நிலங்களைப் பயனாளிகளுக்கு அளவீடு செய்து தரக்கோரி வட்டாட்சியா் அலுவலகம்... மேலும் பார்க்க