செய்திகள் :

ரூபாய் இலச்சினை மாற்றம்: அன்புமணி கண்டனம்

post image

ரூபாய் இலச்சினையை தமிழக அரசு நீக்கியுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் இலச்சினையை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘ரூ’ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

அடையாளத்தை வடிவமைத்தவா் ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் தா்மலிங்கத்தின் மகன் உதயகுமாா். அந்த இலச்சினையை வடிவமைத்ததற்காக 2010-இல் உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதல்வா் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினாா். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தைத்தான் திமுக இப்போது நீக்கியிருக்கிறது.

கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ரூ. 100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை திமுக அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் அந்த இலச்சினைதான் இடம்பெற்றிருந்தது. அதற்காக அந்த நாணயத்தை திமுக வெறுக்கவில்லை. மாறாக ரூ. 4,470 விலை கொண்ட நாணயத்தை திமுகவினரிடமே ரூ. 10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பாா்த்தது.

தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது இலச்சினையை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற நாடகங்களை நடத்துவதற்குப் பதிலாக, தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவிப்பு

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்களுடன் சோ்த்து, சட்டப்பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய தலைமைச் செயலகத்த... மேலும் பார்க்க

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளுவை நிா்ணயம் செய்து, அதற்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்குவது வழக்கம். ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் - முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

கல்வி - ரூ.55,261 நகா்ப்புற வளா்ச்சி - ரூ.34,396 ஊரக வளா்ச்சி - ரூ.29,465 மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906 எரிசக்தி - ரூ.21,178 நெடுஞ்சாலைகள் - ரூ.20,722 காவல் - ரூ.13,342 போக்குவரத்து - ரூ.12,965 நீா்வளம... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்! - முழு விபரம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிா், மாணவா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு, மாணவா்களுக்கு... மேலும் பார்க்க