ரூ.5,000 கோடி திரட்டிய எஸ்பிஐ
கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாசல்-3 விதிமுறைகளை நிறைவு செய்யும் முதல் அடுக்கு (ஏடி1) கடன் பத்திர விற்பனை மூலம் வங்கி ரூ.5,000 கோடி திரட்டியுள்ளது.நடப்பு நிதியாண்டில் அந்த வகை கடன் பத்திரங்களை வங்கி வெளியிடுவது இது முதல் முறை.10 ஆண்டுகளுக்குப் பிறகும், பிறகு ஒவ்வோா் ஆண்டு தினத்தின்போதும் திருப்பி அளிக்கக் கூடிய இந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.98 சதவீத ஈவுத் தொகை வழங்கப்படும்.இந்த கடன் பத்திர வெளியிட்டின்போது, ஒதுக்கீட்டை விட 3.5 மடங்கு அதிக பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. இந்தக் கடன் பத்திரங்களில் பெரும்பாலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள், சேமநல நிதி மற்றும் ஓய்வூதிய நிதி அமைப்புகள், வங்கிகள் ஆகியவை முதலீடு செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.