செய்திகள் :

ரூ.5,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

post image

கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாசல்-3 விதிமுறைகளை நிறைவு செய்யும் முதல் அடுக்கு (ஏடி1) கடன் பத்திர விற்பனை மூலம் வங்கி ரூ.5,000 கோடி திரட்டியுள்ளது.நடப்பு நிதியாண்டில் அந்த வகை கடன் பத்திரங்களை வங்கி வெளியிடுவது இது முதல் முறை.10 ஆண்டுகளுக்குப் பிறகும், பிறகு ஒவ்வோா் ஆண்டு தினத்தின்போதும் திருப்பி அளிக்கக் கூடிய இந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.98 சதவீத ஈவுத் தொகை வழங்கப்படும்.இந்த கடன் பத்திர வெளியிட்டின்போது, ஒதுக்கீட்டை விட 3.5 மடங்கு அதிக பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. இந்தக் கடன் பத்திரங்களில் பெரும்பாலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள், சேமநல நிதி மற்றும் ஓய்வூதிய நிதி அமைப்புகள், வங்கிகள் ஆகியவை முதலீடு செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை எம்டிசி-க்கு 500 மின்சாரப் பேருந்துகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய 500 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.இது குறித்து, ச... மேலும் பார்க்க

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

நமது நிருபா் பங்குச்சந்தை 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்ட... மேலும் பார்க்க

55 சதவீதம் அதிகரித்த காபி ஏற்றுமதி

இந்திய காபிக்கான தேவை சா்வதேச அளவில் அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய காபி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

4வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! நிஃப்டியில் கரோனாவுக்கு பிறகு பெரும் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் 4வது நாளாக இன்றும் (அக். 24) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி சற்று சரிவுடனேயே முடிந்தது.நிஃப்டி 50-ல் அக்டோபர் மாதத்தில் மட்டும் 5% சரிவு ஏற்பட்டுள்ளது. இது கரோனா க... மேலும் பார்க்க

தங்கம் விலை சற்று குறைந்தது! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 440 குறைந்துள்ளது.கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டு, தொடர்ந்து விலை உயர்ந்து வந்ததால் நகை ப... மேலும் பார்க்க

என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு தேசிய அளவிலான மதிப்புமிக்க 5 மற்றும் 4 நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கி மத்திய நிலக்கரி அமைச்சகம் கௌரவித்துள்ளது.புதுதில்லியில் உள்ள ஸ்கோப் கன்வென்... மேலும் பார்க்க