செய்திகள் :

ரூ.94 லட்சம் விஐபி டிக்கெட்டுகளை தியாகம் செய்த பிசிபி தலைவர்!

post image

இந்தியா - பாகிஸ்தான் அணிள் மோதும் போட்டியின் விஐபி டிக்கெட்களை பிசிபி தலைவர் தியாகம் செய்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும்! -ஆஸி. முன்னாள் கேப்டன்

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி தன்னுடைய விஐபி டிக்கெட்டை ரூ.94 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். மேலும், தனக்கான போட்டிகளை சாதாரண ஸ்டாண்டில் இருந்து பார்ப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோஷின் நக்விக்கு விஐபி ஸ்டாண்டில் 30 இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இந்த இருக்கைக்கான டிக்கெட்டுகளை 4 லட்சம் திர்ஹாம்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.94 லட்சம்) விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும், இந்தப் பணத்தை பிசிபியின் நிதியாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் கூறுகையில், “மோஷின் நக்வி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு விஐபி பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் அவர் சாதாரண இருக்கைகளில் ரசிகர்களுடன் இருந்து போட்டியை ரசிக்க விரும்புகிறார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் நடத்தும் மிகப்பெரிய ஐசிசி போட்டி என்பதால் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தந்தை மறைவு: தாயகம் திரும்பினார் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்!

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க