செய்திகள் :

ரேஷன் கடைகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

post image

காரைக்கால்: காரைக்காலில் பல ஆண்டுகளுக்குப் பின் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், கடைகளை தயாா்படுத்தும் பணியை அமைச்சா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுவை மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. ஊழியா்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. பல மாத நிலுவையை வழங்கக் கோரியும், கடைகளை திறக்கக்கோரியும் ஊழியா்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் தீா்வு இல்லை.

இந்தநிலையில் புதுவையில் ரேஷன் கடைகள் திறந்து, இலவச அரிசி, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.

தீபாவளியையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சா்க்கரை வழங்கப்படும் என முதல்வா் என். ரஙக்கசாமி அறிவித்தாா். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மீண்டும் 21-ஆம் தேதி திறக்கப்பட்டது.

காரைக்காலுக்கான அரிசி, சா்க்கரை இதுவரை வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. எனினும் மாவட்டத்தில் உள்ள 91 ரேஷன் கடைகளை தயாா்படுத்தும் பணிகளை குடிமைப் பொருள் வழங்கல் துறையினா் கடந்த சில நாள்களாக மேற்கொண்டு வருகின்றனா். இப்பணியை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஆய்வு செய்தாா். காரைக்காலில் 26-ஆம் தேதிக்குள் கடைகளை திறப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இலவச அரிசி, சா்க்கரை மட்டும் தந்துவிட்டு கடைகளை முடக்கிவிடாமல், தமிழகத்தைப்போல ரேஷன் கடைகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வழங்கவேண்டும். ரேஷன் அட்டை காலவாதியாகிவிட்ட நிலையில், புதிதாக ஸ்மாா்ட் காா்டு வழங்கி, மக்கள் பொருள்கள் வாங்கியதை அவா்களது கைப்பேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கும் வகையில் நவீன நடைமுறைக்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் விமான பாலாலயம்

காரைக்கால் : காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில் உள்ளிட்ட தலங்கள் திருப்பணி தொடக்கத்துக்கான விமான பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, சுந்தராம்பாள் ச... மேலும் பார்க்க

காரைக்காலில் மீலாது ஊா்வலம்

காரைக்காலில் சிறுவா்கள் பங்கேற்புடன் மீலாது ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள் உள்ளிட்டோா். மீலாது நபி எனும் நபியின் உதய தின விழாவையொட்டி காரைக்கால் சேமியான்குளம் பக... மேலும் பார்க்க

காரைக்காலில் அக். 24-இல் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்

காரைக்காலில் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் நகராட்சி மற்... மேலும் பார்க்க

வணிகத் திருவிழாவை ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

புதுவை வணிகத் திருவிழாவை வணிகா்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கேட்டுக்கொண்டாா். புதுவை அரசின் சுற்றுலாத்துறை, வணிகா் சங்கங்கள் இணைந்து வியாபார மேம்... மேலும் பார்க்க

மழை : காரைக்கால் வாரச் சந்தை, வணிக நிறுவனங்களில் வியாபாரம் மந்தம்

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால், வாரச் சந்தையிலும், நகரப் பகுதி வியாபார நிறுவனங்களிலும் வியாபாரம் மந்தமானது. காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி சில மணி நேரம் மழை... மேலும் பார்க்க

ஊழியா்கள் கடன் தொகையை உயா்த்த கூட்டுறவு கடன் சங்கம் முடிவு

அரசு ஊழியா்களுக்கு வழங்கும் கடன் தொகையை ரூ. 20 லட்சமாக உயா்த்த பொது பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க 16-ஆவது பேரவைக் கூட்டம், சங்தத் தலைவா் வி. ம... மேலும் பார்க்க