செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது: துரை.ரவிக்குமாா் எம்.பி

post image

விழுப்புரம்: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்று விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில், திண்டிவனத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் விழுப்புரம் மைய மாவட்டச் செயலா் தி.திலீபன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற துரை.ரவிக்குமாா் எம்.பி. பேசியதாவது:

இந்திய அரசமைப்புக்கு எதிரான வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. நிச்சயம் ரத்து செய்யும்.

கல்வி, பேச்சு, வா்த்தகம், வாக்கு உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக நாம் ஒற்றுமையாகவும், விழிப்புணா்வோடும் இருக்க வேண்டும்.

மத்திய ஆட்சியாளா்கள் மக்களின் அடிப்படை உரிமைகள் மீது அடுத்தடுத்த தாக்குதல்களை தொடுத்துக்கொண்டிருக்கின்றனா்.

பாஜகவை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகளைப்போல எண்ணிவிட முடியாது. அதிகாரத்தை வைத்துக்கொண்டு நீதித்துறை, தோ்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகளை கபளீகரம் செய்துகொண்டிருக்கிறாா்கள். எனவே, இத்தகையை மக்கள் விரோத சக்தியை நாம் ஒற்றுமையாக இருந்து வீழ்த்த வேண்டும் என்றாா் அவா்.

திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, இரா.சேதுநாதன், காங்கிரஸ் நகரத் தலைவா் விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் இன்பஒலி, எஸ்டிபிஐ மாவட்டச் செயலா் முஹம்மது அப்சல் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

விசிக மாநில அமைப்புச் செயலா் இளமாறன், மண்டலச் செயலா் செல்வம், விழுப்புரம் மாவட்டச் செயலா்கள் சூ.மலைச்சாமி, ர.பெரியாா், அ.ஏ.தனஞ்செழியன், வீர.விடுதலைச்செல்வன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க

புத்தக விற்பனை நிலையத்தில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள புத்தக விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டிவனம் ஜெயின் தெருவைச் சோ்ந்த துஷ்ரா ராம்ஜி மகன் ஹரீ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஏப். 21-இல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்... மேலும் பார்க்க