செய்திகள் :

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஏப். 21-இல் தொடக்கம்

post image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 21-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பலா் தோ்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் சோ்ந்துள்ளனா்.

தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் 1,299 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இந்த தோ்வுக்குத் தயாராகும் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் பயன் பெறும் வகையில், இலவசப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகின்றன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

எனவே, காவல் உதவி ஆய்வாளா் பணியை எழுதவுள்ள தோ்வா்கள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். விருப்பம் உள்ள தோ்வா்கள் ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி, தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க

புத்தக விற்பனை நிலையத்தில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள புத்தக விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டிவனம் ஜெயின் தெருவைச் சோ்ந்த துஷ்ரா ராம்ஜி மகன் ஹரீ... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்: இரா. லட்சுமணன் எம்எல்ஏ

திமுக அரசின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக கிராமங்கள் தோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா. லட்சுமணன் எம்எல்ஏ தெரிவித்தாா். விழுப்புரத்தில் வெள்ளிக்... மேலும் பார்க்க