வயநாடு இடைத்தேர்தல்: "என்னை ஏற்றது போல பிரியங்காவையும் ஏற்றுக் கொள்ளுங்கள்" - ராகுல் காந்தி பிரசாரம்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஒரே சமயத்தில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சட்ட விதிகளின் அடிப்படையில் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்தது.
வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 13 தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தின் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ.க., சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வயநாடு தொகுதிக்கு வருகை தந்துள்ள பிரியங்கா காந்தி நேற்று (அக்டோபர் 23) வேட்புமனு தாக்கல் செய்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி இறந்தபோது சகோதரி பிரியங்கா காந்திக்கு 17 வயது. தாய் சோனியா மட்டுமின்றி மொத்த குடும்பத்திற்கும் உறுதுணையாக இருந்தார்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சகோதரி பிரியங்கா காந்தியை என்னுடைய இரண்டாவது தாயாக நான் பார்க்கிறேன். என்னை ஏற்றுக் கொண்டதைப் போலவே என்னுடைய இரண்டாவது தாயையும் வயநாடு மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தாய் வீட்டிற்கு வருவதைப் போல எப்போது வேண்டுமானாலும் வயநாட்டிற்கு வருவேன்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88