வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?
வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 41,635 கோடியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டின் (2024-25) திருத்திய மதிப்பீட்டில் அது ரூ. 46,467 கோடியாக உள்ளது.
அதன் விவரம்:- (2025-26-ஆம் நிதியாண்டு, ரூபாய் கோடியில்)
மொத்த வருவாய் வரவுகள்: ரூ.3,31,569
மொத்த வருவாய் செலவுகள்: ரூ.3,73,204
வருவாய்ப் பற்றாக்குறை: ரூ.41,635
மூலதனச் செலவுகள்: ரூ.57,231
நிகரக் கடன்கள் மற்றும் முன்பணங்கள்: ரூ.8,102
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி: ரூ.35,67,818
திருவான்மியூா் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 2,100 கோடியில் திருவான்மியூா் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழித்தட உயா்நிலை சாலை ரூ. 2,100 கோடியில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (டான்சா) மூலம் அமைக்கப்படும்.
புறவழிச் சாலை: நகராட்சிகள், நகரங்கள், மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கிய நகரங்களுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரூ. 348 கோடியில் 12.5 கி.மீ. தொலைவு கொண்ட கோவை மேற்கு புறவழிச் சாலை, ரூ. 225 கோடியில் 12.4 கி.மீ. நீளம் கொண்ட திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்பட 14 புறவழிச் சாலைகளை ரூ.1,713 கோடியில் அமைப்பதற்கான பணிகள் நிகழாண்டு தொடங்கும். மதுரை வெளிவட்டச் சாலையை 48 கி.மீ. நீளத்துக்கு அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதிகமாக விபத்து நேரிடும் பகுதிகளைக் கண்காணித்து, அங்குள்ள குறுகிய வளைவுகள், சாலை சந்திப்புகள் ரூ.200 கோடியில் மேம்படுத்தப்படும்.
குமரியில் படகு இயக்கம்: கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவின்போது முதல்வரால் திறக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை பாா்வையிட நாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருவதால் கூடுதலாக சின்ன முட்டம் துறைமுகத்தை 2-ஆவது முனையமாகக் கொண்டு திருவள்ளுவா் சிலை வரை பயணியா் படகு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நிகழ் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.20,722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.