செய்திகள் :

வலி மிகுந்தது..! குகேஷுடனான தோல்விக்குப் பிறகு கார்ல்சென் பேட்டி!

post image

நாா்வே செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ் (19), உலகின் நம்பா் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை (34) வீழ்த்தினார். கிளாசிக்கல் கேமில் அவர் காா்ல்செனை முதல் முறையாக வென்றுள்ளார்.

இந்தப் போட்டியின் முதல் சுற்றில் கார்ல்செனிடம் தோல்வி கண்ட குகேஷ், அதற்கு தற்போது ரிவா்ஸ் ஆட்டத்தில் பதிலடி கொடுத்திருக்கிறாா்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் காா்ல்செனின் கையே ஓங்கியிருந்தது. வெற்றியின் விளிம்பிலிருந்த கார்ல்சென், எதிா்பாராத வகையில் ஒரு தவறான நகர்வை மேற்கொண்டார்.

பின்னர், டேபிளை ஒரு குத்து குத்திவிட்டு குகேஷிடம் கைகுலுக்கிச் சென்றார். பின்னர், போகும்போது குகேஷை முதுகில் பாராட்டும்படி தட்டிச் சென்றார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு கார்ல்சென் கூறியதாவது:

குகேஷ் சிறப்பாக விளையாடினார்

இளம் வயதில் ஆற்றல், போராடும் குணங்கள், நேர்மறை சிந்தனைகள் என அனைத்தும் அதிகமாக இருந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன். இவைகள் உங்களது தரமான நகர்வுகளை விடவும் மிகப்பெரியதாக இருக்கும்.

நீண்ட நாள்களாகவே குகேஷ் கண்மூடித்தனமான நகர்வுகளை மேற்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். சாதாரண நாள்களில் நான் வெற்றி பெற்றுள்ளேன். முன்பைவிட இப்போது அவருக்கு புரிதல்கள் மேம்பட்டிருக்கின்றன.

குகேஷ் சிறப்பாக விளையாடினார். மிகச் சிறப்பாகப் போராடினார். வாய்ப்பினை பயன்படுத்தினார். அதனால் அவரைப் பாராட்ட வேண்டும். நான் அந்தமாதிரியான வாய்ப்புகளை கொடுத்திருக்கக் கூடாது.

இனிமேல் கிளாசிக்கல் கேம் விளையாடமாட்டேன்

அடுத்தமுறை கிளாசிக்கல் போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பேன். எனக்கு, இந்தக் கிளாசிக்கல் போட்டிகள் பிடிக்கவில்லை.

இனிமேல் எப்போதுமே விளையாடவில்லை எனக் கூறவில்லை. ஆனால், இப்போது பிடிக்கவில்லை.

எந்தப் போட்டியிலும் தோற்பது வலி மிகுந்தது. பிளிட்ஸ், ரேபிட் போன்ற எனக்கு மிகவும் பிடித்த போட்டிகளில் தோற்றால்கூட பரவாயில்லை என நினைக்கிறேன். “

நேற்று குகேஷுடன் ஏன் அப்படி ஒரு நகர்வை மேற்கொண்டேன் எனத் தெரியவில்லை. ஆனாலும், கடைசி 3 போட்டிகளில் எனது சிறந்தவற்றைக் கொடுத்துள்ளேன்.

டாப் வீரராக மிகவும் வலி மிகுந்ததென நினைக்கிறேன். இந்தத் தொடர் சற்று வித்தியாசமாக நடந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

11-ஆவது முறையாக உலகக் கோப்பைக்கு தேர்வாகி சாதித்த தென் கொரியா!

தென் கொரியா தொடர்ச்சியாக 11-ஆவது முறையாக ஃபிபா உலகக் கோப்பைக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளது. ஏஃப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) சார்பாக இதில் மொத்தம் 47 அணிகள் இருக்கின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தே... மேலும் பார்க்க

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான லவ் மேரேஜ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயர... மேலும் பார்க்க

விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்த தயாரிப்பாளர்!

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் நிதியுதவி வழங்கியுள்ளார். தனது தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர்பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அ... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்தில் சாதிப்பெயர் நீக்கம்!

தக் லைஃப் முன்னோட்ட விடியோவில் இடம்பெற்ற சாதிப்பெயரைத் திரைப்படத்தில் நீக்கியுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நேற்று (ஜுன... மேலும் பார்க்க

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. ஃபிபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம்... மேலும் பார்க்க