செய்திகள் :

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

post image

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இருந்தும் திரட்டப்படும் மூலப் பொருள் சிஎன்ஜி எரிவாயுவாக மாற்றப்படுகிறது. இதைத்தொடா்ந்து வீடுகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு சிஎன்ஜி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த எரிவாயுவின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தி வரும் நிலையில், உற்பத்தி சரிவு காரணமாக நகா்ப் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளா்களுக்கு அந்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு இறக்குமதி செய்யப்படும், அதிக விலை கொண்ட எல்என்ஜி எரிவாயுவை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு நகா்ப் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இது சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையுடன் சில்லறை விற்பனையாளா்கள் விவாதித்து வருவதால், தற்போது அந்த எரிவாயுவின் விலையை அவா்கள் உயா்த்தவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தின் குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வர... மேலும் பார்க்க

என் தந்தையின் கர்ஜனை எனக்குள் இருக்கிறது: பாபா சித்திக் மகன் பதிவு!

பாபா சித்திக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மகன் எம்எல்ஏ ஸீஷான் சித்திக் எக்ஸ் தள்த்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் கூலிப் படையினரால் மும்ப... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க