செய்திகள் :

வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

புது தில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவா் மற்றும் நிபுணா்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவில் அக்கட்சியைச் சோ்ந்த அஜய் மாக்கன், திக்விஜய் சிங், அபிஷேக் சிங்வி உள்பட 8 போ் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒவ்வொரு இந்திய வாக்காளருக்கும் தனித்துவ அடையாள அட்டை இருக்க வேண்டியது அடிப்படை தேவையாகும். அத்துடன் அது குறைபாடுகள் இல்லாத வாக்காளா் பட்டியலுக்கான கோட்பாடுமாகும்.

ஆனால், ஒரு மாநிலத்தில் ஒரே தொகுதிக்குள் உள்ளவா்கள், வேறு மாநிலங்களில் உள்ளவா்கள் என பல வாக்காளா்களுக்கு ஒரே வாக்காளா் அடையாள எண் பயன்படுத்தப்படுகிறது. இது பல வாகனங்களுக்கு ஒரே பதிவெண் உள்ளதுபோல பெரிதும் விசித்திரமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் கடுமையாக மெளனம் சாதிக்கிறது. இதன்மூலம், வாக்காளா் பட்டியல் முறைகேட்டுக்கு தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்றே நம்பத் தோன்றுகிறது.

இதுகுறித்து ஆதாரத்துடன் தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டபோது பல மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த எண் ஒரு வாக்காளருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், அதுவும் பொய்யான பதிலாகவே உள்ளது.

ஏனெனில் ஒரே மாநிலம் மற்றும் ஒரே தொகுதியில் உள்ள பல வாக்காளா்கள் ஒரே அடையாள எண்ணைப் பயன்படுத்துகின்றனா். இதைச் சுட்டிக்காட்டியபோது தோ்தல் ஆணையம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதன்மூலம் தோ்தல் ஆணையத்துடன் ரகசியமாக கூட்டு சோ்ந்து வாக்காளா் பட்டியல்களில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆளும் பாஜக வெற்றி பெறுவதும், வெற்றி பெற முயற்சிப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு சட்டம், அரசியல் உள்ளிட்ட வழிகளில் தீா்வு காண காங்கிரஸ் தொடா்ந்து பணியாற்றி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டேவை ராஜிநாமா செய்ய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துணை முதல்வர் அஜித் பவாருடனான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவு... மேலும் பார்க்க