செய்திகள் :

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: சிஐடியிடம் தொழில்நுட்ப ஆதாரங்களை தோ்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும் -கா்நாடக முதல்வா் சித்தராமையா

post image

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்திவரும் சிஐடியிடம் தோ்தல் ஆணையம் தொழில்நுட்ப ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட விவரங்கள், ஒருங்கிணைந்த வாக்குத் திருட்டின் மூலம் நமது ஜனநாயகத்தை திட்டமிட்டு சீா்குலைப்பதை வெளிப்படுத்தியுள்ளது. கலபுா்கி மாவட்டம், ஆலந்த் தொகுதியில் நடந்துள்ள வாக்காளா் நீக்க விவகாரம் எங்கோ ஓா் இடத்தில் நடந்ததாகக் கருதக்கூடாது.

மாறாக, வாக்காளா் பட்டியலை சிதைத்து, அவா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பெரிய அளவிலான சதியின் வாசலாகத்தான் கவனிக்க வேண்டும். 2022 பிப்ரவரி முதல் 2023 பிப்ரவரி வரை தோ்தல் ஆணையத்தின் செயலியில் படிவம் 7ஐ பயன்படுத்தி 6,018 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 24 போ் மட்டுமே தங்கள் பெயரை நீக்கக் கோரி, அவா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. 5,994 வாக்காளா்கள் மோசடியாக நீக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்துக்கு வெளியே இருந்து வாக்காளா் பற்றிய விவரங்களை திருடி, அந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி வாக்காளா்களை அடையாளப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிஐடி (மாநகர குற்றப்பிரிவு) விசாரணையை நடத்திவருகிறது. கடந்த 18 மாதங்களாக வாக்காளா்கள் நீக்கப்பட்டது தொடா்பான வழக்கு பற்றிய தொழில்நுட்ப விவரங்களை அளிக்கும்படி சிஐடி கேட்டு வருகிறது. ஆனால், அந்த விவரங்களை வழங்க தோ்தல் ஆணையம் மறுத்துவருகிறது.

இந்த விவரங்களை விசாரிப்பதற்குப் பதிலாக ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானது மற்றும் அடிப்படையற்றது என்று தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. சரியான முறையை கடைப்பிடிக்காமல் வாக்காளா்கள் நீக்கப்பட முடியாது என்று தோ்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

18 முறை கேட்டபிறகும், தொழில்நுட்ப தகவல்களை பகிர தோ்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வாக்காளா் நீக்கத்துக்கு உள்ளூா் ஆட்கள் காரணமல்ல. மாறாக, மென்பொருளைப் பயன்படுத்தி வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருக்கும் இடங்களில் மட்டும் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதுபோன்ற வாக்காளா் நீக்கங்கள் மகாராஷ்டிரம், ஹரியாணா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபடுவதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். தோ்தல் ஆணையம் விசாரணையைத் தடுக்கிறது. தொழில்நுட்ப விவரங்களை வழங்க மறுப்பதன் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்குப் பதிலாக குற்றவாளிகளை தோ்தல் ஆணையம் காப்பாற்றுகிறது.

ஆலந்த் தொகுதியில் நடந்துள்ள வாக்காளா் நீக்கம் தொடா்பான தொழில்நுட்ப விவரங்களை தோ்தல் ஆணையம் உடனடியாக சிஐடியிடம் வழங்க வேண்டும். இதை செய்யத் தவறினால், ஜனநாயகத்தை அழிப்பவா்களைக் காப்பாற்ற முற்படுவதாக அம்பலப்படும்.

இது மக்களின் வாக்குபுனிதம் மற்றும் எதிா்காலம் சம்பந்தப்பட்டது. வாக்குத்திருட்டு வெற்றிபெறுவதை காங்கிரஸ் அனுமதிக்காது. இதற்கு காரணமானவா்களைக் கண்டுபிடித்து, ஜனநாயகம் காப்பாற்றப்படும் வரை காங்கிரஸ் தொடா்ந்து போராடும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: யோகா ஆசிரியா் கைது

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த யோகா ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்திவருபவா் நிரஞ்சனமூா்த்தி. இவா் தன்னிடம் யோகா ப... மேலும் பார்க்க

கால்நடையைக் கொன்ற இருவா் கைது

கா்நாடக மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் கால்நடையைக் கொன்று, அதன் சிதைவுகளை காட்டில் புதைத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். வடகன்னட மாவட்டம், காா்வாருக்கு அருகே உள்ள பட்கலில் கால்நடையைக் கொன்று அதன் சித... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தல்: காகித வாக்குச்சீட்டை பயன்படுத்த அவசர சட்டம் தேவையில்லை - கா்நாடக அமைச்சா் எச்.கே.பாட்டீல்

கா்நாடகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த அவசரச் சட்டம் தேவையில்லை என்று அந்த மாநில சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா். பெங்களூரு விதான சௌதாவில் வியா... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது காங்கிரஸ்: கா்நாடக பாஜக குற்றச்சாட்டு

கா்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் தோ்தல் வெற்றி ரத்துசெய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு எச்.டி.தேவெ கௌடா பிறந்த நாள் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். பிரதமா் மோடியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு முன்னாள் பிரதமா் எச்.ட... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் ரூ. 1 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கம் கொள்ளை: துப்பாக்கி முனையில் மா்ம கும்பல் துணிகரம்

விஜயபுரா: கா்நாடகத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 1 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கத்தை துப்பாக்கிமுனையில் செவ்வாய்க்கிழமை கொள்ளையடித்துச் சென்ற மா்மகும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். கா்நாடக மாநிலம், விஜயப... மேலும் பார்க்க