செய்திகள் :

விண்வெளியில் தீக்குச்சியைப் பற்ற வைத்தால் என்னவாகும்? - சீன வீரர்கள் நடத்திய திக் திக் சோதனை!

post image

சீன விண்வெளி வீரர்கள், தங்கள் விண்வெளி நிலையத்தில் தீக்குச்சியைப் பற்ற வைத்து சோதனை நடத்திருக்கின்றனர்.

இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சீனாவின் ‘தியாங்கோங்’ (Tiangong) விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வரும் விண்வெளி வீரர்களான குய் ஹைச்சாவோ மற்றும் ஜு யாங்ஜு அங்கு இருக்கும் பள்ளி மாணவர்களுடன் நேரலையில் கலந்துரையாடியிருக்கின்றனர். அப்போது, புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் ஒரு நெருப்புச் சுடர் எப்படி எரியும் என்பதை விளக்க, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற முயன்றனர்.

அவர்கள் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தபோது, அந்த நெருப்புச் சுடர் நாம் பூமியில் பார்ப்பது போல் இல்லாமல் ஒரு கோள வடிவில் நிலையாக, நீல நிறத்தில் எரிவதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

space

விண்வெளியில் தீயின் வடிவம் ஏன் மாறுகிறது?

பூமியில் நாம் ஒரு தீயை ஏற்றும்போது வெப்பக் காற்று, அடர்த்தி குறைவாக இருப்பதால், மேல்நோக்கி எழும்புகிறது. இந்த நிகழ்வான ‘வெப்பச்சலனம்’, கீழே இருந்து குளிர்ச்சியான, ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை இழுத்து, நெருப்புச் சுடருக்கு ஒரு கண்ணீர்த் துளி போன்ற வடிவத்தைக் கொடுக்கிறது.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத வெப்பச்சலனம் என்ற நிகழ்வே நடைபெறாது. சூடான வாயுக்கள் மேல்நோக்கி எழும்பாது. இதனால் நெருப்புச் சுடர், தன்னைச் சுற்றி இருக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி, அனைத்துத் திசைகளிலும் சமமாகப் பரவி, ஒரு கோள வடிவத்தை அடைகிறது.

சோதனைக்கான காரணம் என்ன?

இந்த எளிமையான சோதனை, விண்வெளியில் வெப்பம், காற்று, மற்றும் எரிதல் ஆகியவை எவ்வாறு வித்தியாசமாகச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

சீனாவின் தியாங்கோங் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த நேரடியான சோதனை, விண்வெளி அறிவியலின் ஒரு சிக்கலான தத்துவத்தை எளிய முறையில் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

உ.பி: மாணவியை சேர்க்க `கன்னித்தன்மை' சான்று கேட்ட மதரஸா நிர்வாகம்; பெற்றோர் போலீஸில் புகார்!

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் என்ற இடத்தில் மதரஸா சார்பாக பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 13 வயது மாணவி படித்து வந்தார். அவர் கடந்த ஆண்டு 7வது வகுப்பு சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 8வது வகு... மேலும் பார்க்க

பெங்களூரு Hit-and-Run வழக்கு: சிசிடிவி காட்சிகளால் சிக்கிய கன்னட நடிகை - என்ன நடந்தது?

சில வாரங்களுக்கு முன்பு, பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹிட்-அண்ட்-ரன் வழக்கில், விபத்தை ஏற்படுத்தியது பிரபல கன்னட நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான திவ்யா சுரேஷ் என்பது தெரியவந்... மேலும் பார்க்க

``மூக்குத்தி, காதணி, மாங்கல்யம் தவிர வேறு தங்க நகைகள் வேண்டாம்'' - கிராமத்தினர் அதிரடி முடிவு; ஏன்?

உத்தரகண்ட் மாநிலம் ஜான்சர்-பவார் பழங்குடிப் பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு புதிய கட்டுப்பாட்டை தங்களுக்குள் விதித்துள்ளனர். அதாவது திருமணங்கள், குடும்ப விழாக்களின்போது திருமணம்... மேலும் பார்க்க

``போனில் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கண்காணிக்கப்படும்'' - பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

மகாராஷ்டிராவில் அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தங்களைத் தயாராகிக்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கட்சி தொ... மேலும் பார்க்க

2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!

பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.2025ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் பலவும், உலகளவில் பேசுபொருளானது. தற... மேலும் பார்க்க