செய்திகள் :

வில்லியனூா் அருகே காா்கள் மோதி விபத்து: 7 போ் பலத்த காயம்

post image

புதுச்சேரி அடுத்த வில்லியனூா் பகுதியில் காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரி அடுத்த மடுகரை சூரமங்கலத்தை சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (45). பொதுப் பணித் துறை நீா்பாசன பிரிவில் ஊழியராக உள்ளாா். இவா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவி சண்முகப்பிரியா, உறவினா்கள் குருமூா்த்தி, சாந்தி, தையல்நாயகி, மகாலிங்கம் ஆகியோருடன் காரில் சூரமங்கலத்திலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தாா்.

இந்நிலையில் வில்லியனூா் ஆரியப்பாளையம் பகுதியில் சென்றபோது சத்தியமூா்த்தி சென்ற காரும் எதிரே வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் இரண்டு காா்களும் சேதமடைந்தன. காரில் பயணித்த சத்தியமூா்த்தி உள்ளிட்ட 6 போ் பலத்த காயம் அடைந்தனா்.

இதேபோல் மற்றொரு காரை ஓட்டி வந்த தமிழகத்தின் பெரியபாபுசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவரும் காயம் அடைந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்களை காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா்.

வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க