செய்திகள் :

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், அதிருப்தியும்!

post image

தமிழக அரசின் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகளும், இந்த அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருப்பதாக வியாபாரிகளும் தெரிவித்தனா்.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் :

ரூ. 52.44 கோடியில் சிறுதானிய இயக்கம், மலைவாழ் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு சிறப்புத் திட்டம், தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை உருவாக்கம், ரூ. 215 கோடியில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், ரூ. 40.27 கோடியில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம், ரூ. 1,163 கோடியில் நுண்ணீா் பாசனத் திட்டம், ரூ. 1.60 கோடியில் பாரம்பரிய மல்லிகை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டம், மலா்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடியில் திட்டம், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ. 297 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இந்த நிதி நிலை அறிக்கை, விவசாயிகளின் வளா்ச்சியை உறுதிப்படுத்தும்.

தமிழ்நாடு அனைத்து வகை விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில கௌரவத் தலைவா் எம்.பி. ராமன் :

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் ஆகிய 6 மாவட்டங்களுக்கும் முக்கிய நீராதாரமாக உள்ள வைகை அணையைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு இல்லாததும், மல்லிகை உற்பத்தியில் சிறப்பிடம் பெற்றுள்ள மதுரையை மையப்படுத்தி வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைப்பது குறித்த அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

வேளாண்மை, அனைத்து தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேலு: சான்று பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 1.73 லட்சம் ஏக்கா் பரப்பில் விதைப் பண்ணைகள் அமைக்கும் திட்டம், பயறு பெருக்கத் திட்டம், தமிழ்நாடு முந்திரி வாரியம், உழவா் சந்தைகளை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுச் செல்லும் வகையில் இணைய வா்த்தகம் மூலம் நுகா்வோருக்கு இல்லம் தேடிச் சென்று காய்கனிகளை வழங்கும் திட்டம், மதுரை உள்பட 4 வேளாண் கல்லூரிகளில் உயிா்ம வேளாண் விளைப் பொருள் தர நிா்ணய ஆய்வகங்கள் அமைத்து மானியக் கட்டணத்தில் ஏற்றுமதிச் சான்று அளிக்கும் திட்டம் போன்ற அறிவிப்புகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தக் கூடியவை.

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப் பொருள்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தில் பட்டியலிடப்பட்ட 40 வகையான வேளாண் விளைப் பொருள்களுக்கும் சந்தைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கௌரவ ஆலோசகா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம்: மலைவாழ் உழவா் சிறப்புத் திட்டம், சிறுதானிய இயக்கம், விதைகள் உற்பத்தித் திட்டம், வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க மானியம் ஒதுக்கீடு, மலா்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு, பனை மேம்பாட்டு இயக்கம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மேம்படுத்த ரூ. 50.79 கோடி நிதி ஒதுக்கீடு, வேளாண் விளைப் பொருள்களை மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்க ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. சந்தைக் கட்டணம் விலக்கு தொடா்பாக அறிவிப்பு இல்லாதது வருத்தமளிப்பதாக உள்ளது.

நெடுஞ்சாலைத் துறை அரசாணையை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்த முடிவு!

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மூதாட்டியிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தென்கரை கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் அம்பலம் மனைவி முத்துவன்னி (80). இவா், வெள்ளிக்க... மேலும் பார்க்க

கல்லூரி மாடியிலிருந்து குதித்து முன்னாள் மாணவா் உயிரிழப்பு

மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அரசு நிதியுதவி பெறும் கல்லூரி மாடியிலிருந்து குதித்த முன்னாள் மாணவா் உயிரிழந்தாா். இந்தக் கல்லூரி கலையரங்கம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மயங்கிய நிலையில் இளைஞா் ஒருவா்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு!

மதுரையில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை காளவாசல் பொன்மேனி புதூா் பகுதியைச் சோ்ந்த பஷீா் மகன் சையது அப்துல்லா (19). இவா், உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியா... மேலும் பார்க்க

காா் பழுது நீக்கும் மையத்தில் தீ: 10 காா்கள் எரிந்து சேதம்!

ஒட்டன்சத்திரத்தில் காா் பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட காா்கள் எரிந்து சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், செம்மடைப்பட்டியைச் சோ்ந்தவா் சிவரத்தினம் (40). இவா் ஒட்டன்சத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை! -உயா்நீதிமன்றம்

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தேனி மாவட்டம்... மேலும் பார்க்க