செய்திகள் :

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

post image

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானம் பெறப்பட்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுவே ஸ்பெயினிடமிருந்து இந்தியா பெறும் இறுதி சி-295 ரக விமானமாகும்.

இந்திய விமானப் படையின் ஆவ்ரோ போா் விமானத்துக்கு மாற்றாக களமிறக்கப்படவுள்ள சி-295 ரக ராணுவ விமானம் 5 முதல் 10 டன் எடையுடைய பொருள்களை சுமந்து செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை செவில் நகரில் உள்ள விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையத்தில் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் கே பட்நாயக் மற்றும் இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரிகள் பெற்றுக்கொண்டனா்.

நிா்ணயிக்கப்பட்ட காலத்தைவிட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-ஸ்பெயின் ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு 56 சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்வதற்காக ஸ்பெயினில் உள்ள விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையத்துடன் இந்தியா கடந்த 2021, செப்டம்பரில் ஒப்பந்தமிட்டது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ் 16 சி-295 ரக ராணுவ விமானங்களை இந்தியாவிடம் ஸ்பெயின் நேரடியாக விநியோகிக்க ஒப்புக்கொண்டது. தற்போது 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை இந்தியாவிடம் ஸ்பெயின் வழங்கியுள்ளது. மீதமுள்ள 40 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா ஒப்புக்கொண்டது. அதை செயல்படுத்தும் வகையில் கடந்த அக்டோபரில் குஜராத்தின் வதோதராவில் உள்ள டாடா மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் நிறுவன (டிஏஎஸ்எல்) வளாகத்தில் சி-295 ரக விமானத் தயாரிப்புக்காக டாடா நிறுவன மையம் நிறுவப்பட்டது.

இந்த மையத்தை பிரதமா் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ் இணைந்து தொடங்கிவைத்தனா். இது இந்தியாவில் ராணுவ விமானத்தின் இறுதி கட்டமைப்பை மேற்கொள்ளும் முதல் தனியாா் நிறுவன மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

6.50 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விட... மேலும் பார்க்க

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகி... மேலும் பார்க்க

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பால்த் கிராமத்திற்கு அருகே பசந்தர் ஆற்றின் கரையில் கைவிடப்பட்... மேலும் பார்க்க