செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியிலிருந்து வந்த பட்டு வஸ்திரம்; ஆண்டாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜை

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து திருப்பதி திருமலை புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவிற்கு கருட சேவையின்போது மலையப்ப சாமி அணிவதற்காக ஆண்டாள் சூடி களைந்த மாலை, பட்டு வஸ்திரம், கைக்கிளி ஆகியவை கொண்டு செல்லப்பட்டு அணிவிக்கப்படும்.

அதே போல் திருப்பதி திருமலை கோயில் நிர்வாகம் பதில் மரியாதையாக ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரத்தை அனுப்பி வைக்கும்.

ஆண்டாளும், ரெங்கமன்னாரும்
ஆண்டாளும், ரெங்கமன்னாரும்

அந்தவகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருப்பதி திருமலைக்குச் சென்ற மங்கள பொருள்களை திருப்பதி தேவஸ்தானம் பெற்றுக்கொண்டு கருட சேவையின் போது உற்சவருக்கு அணிவித்தது.

அதற்குப் பதிலாக திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம், மங்கள பொருட்களை அனுப்பி வைத்தது. அதனை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் பெற்றுக்கொண்டு ஆண்டாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் மற்றும் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

வேலூர் ஞானமலை: 'ஞானம் பிறக்கும்; நோய்கள் தீரும்' - முருகனின் பாதம் பதிந்த திருப்புகழ் தலம்!

வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை மிகவும் பிரசித்திபெற்றது. அந்த மாவட்டத்திலேயே முருகப்பெருமானின் திருவடி பட்ட ஒரு மலை ஒன்று உண்டு என்பது பலரும் அறியாதது. சுற்றிலும் வெப்பாலை மரங்கள் உயர்ந்து நிற்க சிறிய ம... மேலும் பார்க்க

குருவின் அருளைப் பெற்று தரும் கால பைரவ பூஜை; 7 காரணங்களுக்காக இந்தப் பரிகாரம்

அதிசார குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகள் தர, துன்பங்கள் நீங்க 14-10-2025 தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது.முன்பதிவு மற்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டம், சௌந்தர்யபுரம்: கடன் தீரும், திருமணம் கைகூடும், பலன் தரும் ஸ்ரீபத்மசக்கரம்!

இந்த உலகில் நமக்கு அலைமகளின் அருள் தேவை. செல்வம் என்றால் பணம் மட்டுமல்ல. திருமணம், குழந்தை பாக்கியம், தன தான்ய பெருக்கம், ஆடை ஆபரண சேர்க்கை என அனைத்துமே செல்வம்தான். அத்தனை செல்வங்களையும் நமக்கு அள்ளி... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

"மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் 2026 பிப்ரவரிக்குள் குடமுழுக்கு நடத்தி விடுவோம்" என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரம், 'த... மேலும் பார்க்க

தேனி, வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்: கண் பிரச்னை தீரும், தொட்டில் கட்டினால் குழந்தை வரம்!

ஈசனும் அம்பிகையும் தேசம் முழுவதும் பல்வேறு தலங்களில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். அப்படிப்பட்ட சுயம்புத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானது. நம் பாவங்களை எல்லாம் போக்கக்கூ... மேலும் பார்க்க

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில்: உப்பில்லா நிவேதனங்கள்; சரணாகதி அருளும் தென் திருப்பதி பெருமாள்!

திருப்பதி பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்யும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. ஆனால் சூழ்நிலை காரணமாக எல்லோராலும் ஒவ்வோர் ஆண்டும் பயணப்பட முடிவதில்லை. எனவேதான் பெரியோ... மேலும் பார்க்க