செய்திகள் :

ஹஜ் புனிதப் பயணத்தில் 16,73,230 போ் பங்கேற்பு!

post image

இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 16,73,230 போ் பங்கேற்பதாக எக்ஸ் தளத்தில் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஹஜ் பயணத்தில் பங்கேற்பவா்களில் பெரும்பாலானவா்கள் வெளிநாட்டினா். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமாா் 1.6 லட்சம் குறைவு. கரோனா நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியிருந்தது. 2012-ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை 31.6 லட்சத்திற்கும் மேல் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது.

கரோனா பரவல் காலகட்டத்தில் (2020-2022) சவூதி அரேபியா ஹஜ் பயணிகள் வரவை வெகுவாகக் கட்டுப்படுத்தியது. மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே புனிதப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் எண்ணிக்கை 30 ஆண்டுகால குறைந்தபட்சமாகும்.

உலகளாவிய பணவீக்கம், பொருளாதார நெருக்கடிகள், அதீத வெப்பநிலை, கடுமையான நுழைவு விதிமுறைகள் ஆகியவை ஹஜ் பயணத்துக்காக இந்த ஆண்டு சவூதி அரேபியா சென்றவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க