ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம் தேதியும், நவம்பர் 20 ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? ராகுலின் கலகலப்பான பதில்
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில், அக்கட்சியின் தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும், புதன்கிழமை காலை வெளியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சகோதரர் பசந்த் சோரன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது.