செய்திகள் :

10, +2 வினாத்தாள் கசிவு வதந்தி: பெற்றோா் விழிப்புடன் இருக்க சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

post image

புது தில்லி: ‘10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் குறித்து பெற்றோா் மற்றும் மாணவா்கள் விழிப்புடன் இருக்குமாறு’ மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ மூத்த அதிகாரியொருவா் கூறுகையில், ‘யூடியூப், பேஸ்புக், எக்ஸ் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பொதுத் தோ்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக விரோதிகள் சிலா் வதந்திகளை பரப்புவது எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது.

இத்தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. மேலும், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்கும் நோக்கம் கொண்டவை. இவ்விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து, தவறான தகவல்களை பரப்பியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவாளிகளைக் கண்டறிந்து வழக்குத் தொடர சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதேநேரம், தோ்வு செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் பள்ளிகள் உள்பட அனைத்து தரப்பினரும், சிபிஎஸ்இ வலைதளத்தில் கிடைக்கும் அதிகாரபூா்வ தகவல்களை மட்டுமே அணுக வேண்டும்’ என்றாா்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கடந்த சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி நிறைவடைகிறது.

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க