செய்திகள் :

``100 கிலோவை தாண்டிய எடை.. மனஅழுத்தம் அதிகமானது'' - பிரசவ கால அனுபவம் பகிர்ந்த சமீரா ரெட்டி

post image

நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு உள்பட ஏராளமான மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் தொழிலதிபர் அக்‌ஷய் வார்தே என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு சொந்த வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்திருக்கிறார். அத்தம்பதிக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

சமீரா ரெட்டி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு தனது பிரசவ கால அனுபவங்கள் மற்றும் தான் சந்தித்த நெருக்கடிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறுகையில்,''நான் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்த போது எனது உடல் எடை 105 கிலோவாக அதிகரித்தது. இதனால் பிரசவத்திற்கு பிறகு ஒரு ஆண்டு வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை. எனவே எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.

எனது டாக்டர்தான் நான் மன அழுத்ததில் இருந்து வெளியில் வர உதவினார். நான் மன அழுத்ததில் இருந்த போது எனது கணவர் தான் மகனுக்கு உடைகள் மாற்றுவது, சாப்பாடு கொடுப்பது போன்ற வேலையில் ஈடுபட்டார். இவ்விவகாரத்தில் பெண்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை. நான் நடிப்பை கைவிட்ட போது என்னிடம் ஏன் கைவிடுகிறாய் என்றோ அல்லது என்ன ஆனது என்றோ யாரும் என்னிடம் கேட்கவில்லை. ஆனால் அத்துறை அப்படிப்பட்டது என்பதால் நானும் அதனை கண்டுகொள்ளவில்லை''என்றார்.

கொரோனா நேரத்தில் கூட சமீரா ரெட்டியின் இரண்டு குழந்தைகளுக்கும் கொரேனா தொற்று ஏற்பட்டது. கடைசியாக சமீரா ரெட்டி வரதநாயகா என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2013-ம் வெளியானது. படத்தை ஐயப்பா சர்மா இயக்கினார். இதில் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்தார்.

"உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம்" - திகார் சிறையிலிருந்து கரண் ஜோகருக்கு சுகேஷ் கடிதம்

பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர் தனது படத் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன் நிறுவனத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வெளியிலிருந்து முதலீடு பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது நிறு... மேலும் பார்க்க

Salman Khan: "சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தவறு" - மன்னிப்பு கேட்டு மீண்டும் மெசேஜ்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சல்மான் கானை கொ... மேலும் பார்க்க

ரூ.250 கோடியில் கட்டப்பட்டுள்ள 6 மாடி பங்களா; விரைவில் குடியேறும் ரன்பீர் கபூர்-ஆலிபா பட் தம்பதி!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதி மும்பை பாந்த்ராவில் ரூ.250 கோடியில் 6 மாடி கொண்ட ஆடம்பர அடுக்குமாடி பங்களா கட்டி வந்தனர். இக்கட்டடத்தின் கட்டுமானப் பணியை கபூர் தம்பதி அடிக்கடி சென்று பார்த்து வ... மேலும் பார்க்க

SRK: "இறுதி மூச்சு வரை நடிப்பேன்; யாராவது ஆக்‌ஷன் சொல்ல நான் சாக வேண்டும்..." - ஷாருக்கான் விருப்பம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு நடித்த மூன்று படங்களும் தலா ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளன. தற்போது தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் என்ற படத்தில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகி... மேலும் பார்க்க

Salman Khan: "ரூ. 5 கோடி கொடுக்காவிட்டால்...." - சல்மான் கானுக்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இக்கொலை மிரட்டல் காரணமாக சல்மான் கான் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடனேயே வெளியில் வருகிறார். ... மேலும் பார்க்க

Tamannaah: பணமோசடி வழக்கு; 2 மணி நேரம் விசாரிக்கப்பட்ட நடிகை தமன்னா - என்ன நடந்தது?

'HPZ டோக்கன்' எனும் மொபைல் செயலி பிட்காயின், மற்றும் கிரிப்டோகரன்ஸி முதலீடுகள் என்ற போலி விளம்பரம் மூலம் பலரை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வர... மேலும் பார்க்க