செய்திகள் :

130 ஆண்டு கால கனவு.. காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்பு!

post image

காஷ்மீரின் பாரமுல்லா - ஜம்மு வின் உதம்பூர் இடையேயான ரயில் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கவிருக்கிறார்.

பல ஆண்டு கால எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கும் அவா், உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தையும் நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா்.

இந்த ரயில் திட்டம் கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. நாட்டின் பிற பகுதியிலிருந்து காஷ்மீருக்கு ரயில் பாதை என்பது கிட்டத்தட்ட 130 ஆண்டு கால கனவு. இதன் ஒரு பகுதியாக, கட்டமைக்கப்பட்டிருக்கும் அஞ்ஜி பாலம், இந்தியாவின் முதல் கேபிள் -ரயில் பாலம்.

நாளை தொடங்கி வைக்கப்படும் ரயில் திட்டம் மூலம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து நேரடியாக காஷ்மீர் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை என்றும், ஜம்முவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கத்ரா ரயில் நிலையத்தில் இறங்கி மாற்று ரயில் மூலம் காஷ்மீர் செல்ல முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்புக்கான உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டம், கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால், இந்த திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாமல் போயிருக்கிறது.

மொத்தம் 272 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் இதுவரை 161 கி.மீ. தொலைவு வழித்தடம் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டது. இறுதியாக 111 கி.மீ. தொலைவுள்ள கத்ரா-பனிஹால் வழித்தடப் பணிகள் கடந்த ஜனவரியில்தான் நிறைவடைந்தன.

திட்டப் பணிகள்தான் தாமதம் என்றால், திறப்பிலும் கூட தாமதம் ஏற்பட்டது. காஷ்மீருக்கான நேரடி ரயில் சேவையை பிரதமா் மோடி கடந்த ஏப்ரலில் திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் 6ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க

ஆர்சிபி பேரணி விவகாரம்! அரசியல் செயலாளர் விடுவிப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் விடுவிக்கப்பட்டார்.பெங்களூரு ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம், நாடு முழ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை

மத்தியப் பிரதேசத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர் விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக... மேலும் பார்க்க

வாடிக்கையாளர்களின் ரூ. 4.58 கோடி கையாடல்! முதலீடு செய்த வங்கி மேலாளர் கைது

ராஜஸ்தானில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்த வங்கி மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் தனியார் வங்கியின் வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்... மேலும் பார்க்க