17 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வெல்ல காரணமான பயிற்சியாளரை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியின் பயிற்சியாளர் ஏஞ்சலோஸ் ஆஞ்சே போஸ்டெகோக்லோ நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி சமீபத்தில் கைப்பற்றியது.
40 ஆண்டுகளில் டாட்டன்ஹாம் அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து பட்டம் இதுவாகும். கடைசியாக 2008-இல் இங்கிலீஷ் லீக் கோப்பையையும், வென்றிருந்தது.
சுமார், 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுகொடுத்த பயிற்சியாளரை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?
ப்ரீமியா் லீக் தொடரில் 22 போட்டிகளில் தோல்வியுற்றது 17-ஆவது இடத்தில் முடித்தது. இதனால், அந்த அணியின் உரிமையாளர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் பிறந்த போஸ்டெகோக்லோ (59) டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியில் 2023-இல் சேர்ந்தார்.
அடுத்ததாக இந்த அணிக்கு தாமஸ் பிராங்க் அல்லது மார்கோ சில்வாவை புதிய பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.
அடுத்த (2025-26) சீசனில் சாம்பியன்ஸ் லீக்கிற்கு வாய்ப்பு கிடைத்ததால் அதை வெல்லும் முனைப்பில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி இருக்கிறது.
We are extremely grateful to Ange for his commitment and contribution during his two years at the Club.
— Tottenham Hotspur (@SpursOfficial) June 6, 2025
Ange will always be remembered as only the third manager in our history to deliver a European trophy.
Thank you Ange pic.twitter.com/gT6deIaa5e