செய்திகள் :

``2 நாள் உனக்கு டைம்; என்னுடைய வீரியத்தை பார்ப்பாய்'' - பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசிய விசிக மா.செ

post image

கன்னியாகுமரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பாரதி. சமீபத்தில், நாகர்கோவில் அருகே உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி இயங்கி வருவதாக கூறி மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ஆதரவாக நேற்று நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ரெட் ஸ்டார்) மாவட்ட செயலாளர் மணவை கண்ணன் ஆகியோர் மிகவும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளால் பெண் அதிகாரி பாரதியை விமர்சித்து பேசியுள்ளனர்.

வி.சி.க ஆர்ப்பாட்டம்
வி.சி.க ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அல்காலித் பெண் அதிகாரி குறித்து பேசியதாவது:

"உனக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் இருக்கிறது. ஒரு கம்பெனியை மூடுவதற்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? அட நாயே, உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? லஞ்சப் பேர்வழி பாரதியே, தைரியம் இருந்தால் நீ வந்து பண்ணிப்பார். இரண்டு நாட்கள் உனக்கு டைம் தருகிறேன்; அதற்குள் மின் இணைப்பை வைக்காவிட்டால் அப்போது என்னுடைய வீரியத்தை நீ பார்ப்பாய். பாரதிக்கு நேரடியாக சவால் விடுகிறேன்- அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்று நீ பார்ப்பாய்.

அந்த சீட்டில் இருந்து நீ சஸ்பெண்ட் செய்யப்படுவாய். அதற்கான வேலைகளை விடுதலை சிறுத்தைகளும் அந்த நிறுவனமும் எடுக்கும். முறையான சில அனுமதிகள் அங்கு இல்லை; அதற்கான நடவடிக்கைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. அதற்காக அந்த கம்பெனியை மூடிவிடுவாயா? உனக்கு தெம்பு இருந்தால், நாணம் இருந்தால் என்மீது மானநஷ்ட வழக்கு போடு."

இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

வி.சி.க மாவட்டச் செயலாளர் அல்காலித்

பெண் அதிகாரியை “நாய்” எனவும் “சங்கி” எனவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியதாக, அதிகாரி பாரதி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயிலின் தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் மணவை கண்ணன் ஆகியோர் சிலருடன் போராட்டம் நடத்தி, தன்னை அவதூறாகப் பேசி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, பெண் அதிகாரி பாரதியின் புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அல்காலித், மணவை கண்ணன் மற்றும் பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.... மேலும் பார்க்க

Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்... மேலும் பார்க்க

நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்ட... மேலும் பார்க்க

``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது சதய விழாவின் முக்கிய நிகழ்வா... மேலும் பார்க்க

10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 ப... மேலும் பார்க்க