மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
BB Tamil 9: ``கத்திக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது" - காட்டமான விஜய்சேதுபதி
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய (நவ.1) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
சனிக்கிழமை என்பதால் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, "எல்லோரும் நல்லா இருக்கிங்களா? கத்துக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது.

உங்களுக்கு தெரிய வேணாமா? பேசுனா உங்களுக்கு புரியுமா? இல்ல உங்கள மாதிரி கத்துனா தான் புரியுமா? பாரு, வினோத், ரம்யா, திவாகர் உங்களுக்கு கேட்குதா?" என விஜய் சேதுபதி கையில் ஸ்பீக்கரை வைத்து பிக் பாஸ் போட்டியாளர்கள் பாணியிலேயே கத்துகிறார்.




















