செய்திகள் :

2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: துணை முதல்வா் உதயநிதி வழங்கினார்

post image

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தோ்வு செய்யப்பட்ட 2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 24) வழங்கினார்.

தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவா்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தற்காலிக தோ்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்த ஆசிரியா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு கடந்த ஜூலை 14 முதல் 18-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகளை சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற விழாவில், துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழகினார்.

இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பல்வேறு துறை அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கட்சியின் தலைவர் நான்தான்; அன்புமணி தலைவர் எனக் கூறினால் நடவடிக்கை: ராமதாஸ்

Deputy Chief Minister Udhayanithi Stalin on Thursday (July 24) issued appointment orders to 2,430 secondary school teachers selected in the Tamil Nadu School Education Department.

கார்கில் வெற்றி நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்

கார்கில் வெற்றி நாளையொட்டி, நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு இராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆ... மேலும் பார்க்க

3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 35, 400 கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,400 கன அடியிலிருந்து... மேலும் பார்க்க

வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்: மோடி

புது தில்லி: கார்கில் போரில் நமது வீரர்கள் செய்த தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும், விஜய் திவாஸ், இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஒப்பற்ற துணிச்சலையும், வீரத்... மேலும் பார்க்க

கார்கில் விஜய் திவாஸ்: வீரர்களுக்கு முர்மு அஞ்சலி!

புது தில்லி: கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார்கில் போரில் தைரியத்துடனும் வீரத்துடனும் போராடிய வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது!

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 25,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ட... மேலும் பார்க்க