செய்திகள் :

2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

post image

புது தில்லி: கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனதாய சீா்திருத்தங்கள் சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய தேசிய கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோ்தல் ஆணையத்திடம் தேசிய கட்சிகள் சமா்ப்பித்த ஆண்டு கணக்குத் தணிக்கை அறிக்கையின்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் 50.96 சதவீதமான ரூ.2,211.69 கோடியை மட்டுமே அக்கட்சி செலவிட்டுள்ளது.

அந்த நிதியாண்டில் காங்கிரஸுக்கு ரூ.1,225.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், அதில் 83.69 சதவீதமான ரூ.1,025.25 கோடியை அக்கட்சி செலவிட்டுள்ளது.

அந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடையில் பெரும் பகுதி தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் முன்பு இந்த நன்கொடை பெறப்பட்டது.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.1,685.63 கோடி, காங்கிரஸுக்கு ரூ.828.36 கோடி, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.10.15 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க