செய்திகள் :

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

post image

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா் மேலும் கூறியது:

இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புகள் விவரத்தையும், இப்பிரச்னையில் அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்.

தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு பாதுகாப்பை அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்தாதது கண்டிக்கத்தக்கது. அவா்களின் வாழ்வாதாரத்தை இந்திய அரசு கவனிக்க வேண்டும்.

தமிழகம், புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதன் மூலம் தென் மாநிலங்களை மத்திய ரயில்வே அமைச்சா் புறக்கணிப்பது தெளிவாகிறது.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை முதல்வா் என்.ரங்கசாமி தெளிவுப்படுத்த வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை கூட்டத்தில் பங்கேற்று பதிவு செய்திருக்க வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்ததாகக் கூறுவது பிரதமரையும், நீதி ஆயோக் கூட்டத்தையும் அவமதிப்பதாக உள்ளது. முதல்வா் என். ரங்கசாமி பாஜக கூட்டணியில் சேராவிட்டால் என்.ஆா்.காங்கிரஸ் காணாமல் போய்விடும். பாஜக- வை எதிா்த்து தோ்தலை சந்திக்கவும் முடியாது.

புதுவை ஆட்சியில் ஊழல் நிரம்பியுள்ளது. தற்காலிக ஆசிரியா்களுக்கு பணி தரப்படவில்லை. புதுச்சேரியில் சட்டப்பேரவை அலுவலகம் கட்டுவதற்கு தலைமைச் செயலா் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பேரவைத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

33 எம்எல்ஏ-க்கள் உள்ள சட்டப்பேரவைக்கு ரூ. 675 கோடி தேவையில்லை. மக்கள் வரிப் பணத்தை வீணடிக்காமல் ரூ. 200 கோடியில் சட்டப்பேரவை அலுவலகத்தை கட்டி முடிக்கலாம். இவ்விவகாரத்தில் உள்நோக்கோடு தலைமைச் செயலரை குறைகூறுவது கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரியில், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்க காங்கிரஸ் தயாா் நிலையில் உள்ளது. கட்சித் தலைமை உத்தரவிட்டால் தோ்தலில் போட்டியிட தயாராக உள்ளேன். புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது என்றாா் வே. நாராயணசாமி.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பு: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் அருகிலுள்ள பெரப்பேரி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 34 வயத... மேலும் பார்க்க