செய்திகள் :

2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம்.. தவெகவின் போஸ்டரால் பரபரப்பு!

post image

கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28-ஆம் தேதி சென்னையில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாபு தலைமையில், பொதுக் குழுவில் கூட போறோம், தளபதி தலைமையில் 2026 - ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்று கோவை முழுவதும் பொதுக் குழுவுக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

விஜய் தலைமையில் ஆளப்போறோம் என த.வெ.க.வால் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 அன்று சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அண்மையில் வெளியிட்டார்.

அடுத்த 3 மணிநேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

கோடையில் 22,000 மெகாவாட் மின் தேவை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னையில் மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செ... மேலும் பார்க்க

மனோஜ் உடல் தகனம்

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரின் இரு மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர். இதனைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு அது திருப்பதிக்கு இணையாக மாறும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர், திருச்செந்தூர், தஞ்சாவ... மேலும் பார்க்க

ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி

ஊரகப் பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க