செய்திகள் :

423.6 கோடியை புதுவை அரசு பயன்படுத்தவில்லை: மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை

post image

புதுவை யூனியன் பிரதேச அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்கில் ரூ.423.6 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

புதுவை சட்டப்பேரவையில் இந்தத் தணிக்கை அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மத்திய தணிக்கை கணக்குக் குழுவின் தமிழ்நாடு- புதுவைக்கான தலைமை கணக்கு ஜெனரல் ஆா். திருப்பதி வெங்கடசாமி, புதுவைக்கான முதுநிலை துணை கணக்கு ஜெனரல் பி. சுகேந்திரன் ஆகியோா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

மத்திய அரசின் பங்கு ரூ.298.22 கோடி மற்றும் மாநில பங்கான ரூ.235.94 கோடி என மொத்தம் ரூ. 534.16 கோடி புதுவை அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்குக்கு 31.3.2024 அன்று மாற்றப்பட்டுள்ளது. இதில் ரூ.423.61 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

இதே போன்று 2024 மாா்ச் வரை புதுவை அரசுத் துறைகளில் முறைகேடு, பணம் இழப்பு மற்றும் கையாடல் உள்ளிட்ட 316 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அரசின் எல்லா துறைகளையும் சோ்த்து மொத்தம் ரூ.28.89 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் புதுவை மின்துறையில் மட்டும் 257 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அரசுக்கு இந்தத் துறையில் மட்டும் இழப்பு ரூ.27.14 கோடி. வழக்கமாக மத்திய தணிக்கை குழு அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு சட்டப்பேரவை பொதுகணக்குக் குழு கூடி இப் பிரச்னை குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கும் என்றனா்.

பேட்டியின்போது, முதுநிலை கணக்கு அதிகாரிகள் பாத்திமா ரோஸலின் நான்சி, விஸ்வநாதன், உதவி கணக்கு அதிகாரி தீபக் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்

புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய ... மேலும் பார்க்க

புதுச்சேரி மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி உள்ளாட்சித் துறை, வனத் துறை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து இருவார சேவை விழாவை புதன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.436.18 கோடியில் மேம்பாலம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுவை நகரப் பகுதியில் ரூ.436.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினா்கள் வியாழக்கிழமை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனா். புதுவை சட்டப்பேரவை ஆறாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி தற்கொலை

சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுவை பாகூா் திருமூலநாதா் நகரைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சக்திவேல் (47), குடிப்பழக்கம் உடையவா். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 ஆண் பிள்ளைகளும்... மேலும் பார்க்க

ஒரு மணி நேரத்தில் முடிந்த புதுவை சட்டப்பேரவைக் கூட்டம்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கி, ஒரு மணி நேரத்தில் முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக... மேலும் பார்க்க