பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ( 11-ம் நாள்) தினத்திற்கான முதல் புரோமோ வெளியான நிலையில், இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷா கண்கலங்கிப் பேசியிருக்கிறார்.
நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷா குப்தா சமைத்திருந்தார். அவர் உணவில் காரம் அதிகமாக போட்டுவிட்டார் என்றும், அதனால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டு விட்டது என்றும் போட்டியாளர்கள் கூறினார்கள். முத்துக்குமரன், ஜாக்குலின், சுனிதா, ஜெஃப்ரி உள்ளிட்டோர் இதனை கலாய்த்திருந்தார்கள். இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் தர்ஷா குப்தா இது குறித்து கண்கலங்கி பேசியிருக்கிறார்.
அந்த புரோமோவில், "என்னை அனைவரும் சேர்ந்து காயப்படுத்திட்டே இருக்காங்க. இப்படி எல்லாம் நடக்கும் போது நான் ஏன் இப்படி இருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இப்படிதான் செய்கிறார்கள். விளையாட்டுக்கு செய்ததாக இருந்தாலும், நான் ஒரு ஷோவில்(cwc)வில் அவ்வளவு நாட்கள் இருந்துவிட்டு வந்துருகிறேன், இப்போது இப்படி நீங்கள் பேசினால், வெளியே இருக்கும் மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பாங்க" என பேசிருக்கிறார். அந்த ப்ரோமோ இங்கே!