செய்திகள் :

Bihar Election: சொந்தக் கட்சி சீனியர்களை மாறி மாறி நீக்கும் JDU, RJD; பரபரக்கும் பீகார் களம்!

post image

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க-வும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

மறுபக்கம் மகாபந்தன் கூட்டணியில் 143 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், 61 இடங்களில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன.

பீகாரில் நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி
பீகாரில் நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி

இதில் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரும் முன்னிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதுபோக, ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மூன்றாவது கூட்டணியும், தனித்து களமிறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜும் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ, சீனியர் நிர்வாகிகள் உள்ளிட்டோரை தங்களின் கட்சியிலிருந்து நீக்கி வருவது பேசுபொருளாகியிருக்கிறது.

முன்னதாக கடந்த 3 நாள்களில், முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார், எம்.எல்.ஏ கோபால் மண்டல், மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஷியாம் பகதூர் சிங், சுதர்சன் குமார் மற்றும் பல முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள் என மொத்தம் 16 பேரை கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கட்சிக்கெதிரான செயல்களில் ஈடுபட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலிருந்து 27 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 6 வருடங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

இந்த 27 பேரில் சோட் லால் ராய், முகமது கம்ரான் ஆகிய 2 எம்.எல்.ஏக்கள், ராம் பிரகாஷ் மஹ்தோ, அனில் சாஹ்னி, சரோஜ் யாதவ், அனில் யாதவ் ஆகிய 4 முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் கணேஷ் பாரதி ஆகியோர் அடங்குவர்.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாநில தலைவர் மங்கனி லால் மண்டல் வெளியிட்ட அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஜனதா தளம் அல்லது மகாபந்தன் வேட்பாளர்களுக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கையாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Delta விவசாயிகளின் கண்ணீர் கதை: நெல் கொள்முதலில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசு | Ground Report

இந்த ஆண்டு வழக்கத்தைவிட டெல்டாவில் இரண்டு மடங்கு அதிகமாக குறுவை சாகுபடி நடந்துள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூலும் கிடைத்தது. ஆனால், இதற்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய விவசாயிகள் துயரத்தி... மேலும் பார்க்க

"நாளைக்கு என்னாகும் தெரியாது" - பொடி வைத்த ஜோடங்கர் - காங்கிரஸ் கணக்கு என்ன?

விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா, அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று(அக்.27-ம் தேதி) நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக-வும் கா... மேலும் பார்க்க

புதுவை: பெண்களுக்கு Night Shift தடை: "பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என அரசு ஒப்புக்கொள்கிறதா?"- திமுக

பெண்களை இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்துவதற்குத் தடை விதித்து புதுச்சேரி தொழிலாளர் துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதுகுறித்துப் பேசியிருக்கும் புதுச்சேரி தி... மேலும் பார்க்க

கோவையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா!

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தமிழக அமைச்சர்கள் குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற பொதுமக்கள்குடியரசு துணைத் தலைவரை வாழ்த்திய அதிமுகவை சேர்ந்த வேலுமணி குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்கோயம்புத்த... மேலும் பார்க்க

'தேர்தல் தோல்வி... பிரதமரிடம் இருந்து வந்த அழைப்பு..' - மனம் திறந்த சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா ந... மேலும் பார்க்க