செய்திகள் :

IPL 2025 Finals : 'இறுதிப்போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? - விதிகள் என்ன சொல்கிறது?

post image

'இறுதிப்போட்டி...'

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் இன்று அஹமதாபாத் மைதானத்தில் மோதவிருக்கின்றன. ஆனால், அஹமதாபாத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வெளியாகியிருக்கிறது.

RCB vs PBKS | IPL 2025 Finals
RCB vs PBKS | IPL 2025 Finals

'மழை வாய்ப்பு...'

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடந்த குவாலிபையர் 2 போட்டியிலும் மழை குறுக்கிட்டு போட்டி தாமதமாக தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? ஓவர்கள் எப்படி குறைக்கப்படும்? ரிசர்வ் டே உண்டா?

'மழை பெய்தால்...'

இந்த இறுதிப்போட்டியை பொறுத்தவரைக்கும் போட்டி நேரத்தோடு கூடுதலாக இரண்டு மணி நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேமாதிரி, போட்டி மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில் இன்னிங்ஸ் ப்ரேக் இடைவேளையையும் குறைத்து விடுவார்கள். 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டி 7:30 மணிக்கு தொடங்க வேண்டும் இல்லையா? மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில் 9:45 மணி வரைக்குமே ஓவர்களை குறைக்கவே மாட்டார்கள்.

IPL 2025 Finals
IPL 2025 Finals

9:45 மணிக்கு போட்டி தொடங்கினாலும் முழுமையாக 20 ஓவர் போட்டியாக நடந்துவிடும். 9:45 க்குள் போட்டியை தொடங்க முடியாவிடில் அடுத்த ஒவ்வொரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் குறைந்துகொண்டே வரும். கடைசியாக 11:56 மணிதான் Cut Off Time. 11:56 மணிக்குள் போட்டி தொடங்கிவிட்டால் குறைந்தபட்சமாக 5 ஓவர் போட்டியையாவது நடத்திவிட முடியும். 11:56 மணியையும் கடந்துவிட்டால் அவ்வளவுதான். இன்றைய நாளில் போட்டி நடக்காது. இறுதிப்போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் போட்டி நாளை நடைபெறும்.

ஒருவேளை போட்டி ஆரம்பித்து இடையில் மழை பெய்து போட்டி தடைபட்டு அதற்கு மேல் தொடங்கவே முடியவில்லையெனில், இன்றைய நாளில் விட்ட இடத்திலிருந்து போட்டி நாளை நடக்கும்.

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

'விஜய் மல்லையா பேட்டி...'பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா 'ராஜ் சமானி' (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்க... மேலும் பார்க்க

Preity Zinta : 'நீங்க இல்லாம நாங்க இல்ல...' - நெகிழும் ப்ரீத்தி ஜிந்தா

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அந்த அணியின் வீரர்கள் பற்றியும் ரசி... மேலும் பார்க்க

IPL : 'இளம் வீரர்களுக்கு எதற்கு அத்தனை கோடிகள்?' - கவாஸ்கர் காட்டம்!

ஐ.பி.எல் இல் ஆடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க

TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி

டிஎன்பிஎல் கிரிக்கெட் கோவை எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கே... மேலும் பார்க்க

'இதெல்லாம் உங்களுக்கு பெருமையா சிவக்குமாரே? - பெங்களூரு கூட்ட நெரிசலும் நுண் அரசியலும்! - ஓர் அலசல்!

'பெங்களூரு கூட்ட நெரிசல்!'ஐ.பி.எல் யை ஆர்சிபி அணி வென்றதற்காக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான பேர் காயம்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின... மேலும் பார்க்க

Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் ... மேலும் பார்க்க