செய்திகள் :

Kayal Serial: கல்யாணமே முடிஞ்சாச்சு… கயல் சீரியல் முடிவுக்கு வருகிறதா? - `ட்விஸ்ட்’ வைக்கும் சைத்ரா

post image

கயல் சீரியலில் நாயகி கயலுக்கும் நாயகன் எழிலுக்கும் ஒருவழியாகத் திருமணம் முடிந்துவிட்டது. சுமார் ஒரு மாத காலமாக கயல் சீரியலில் இந்த திருமணம் தொடர்பான காட்சிகள் தான் ஒளிபரப்பட்டது. 

சீரியல் இந்த கட்டத்திற்காக தான் பலத் திருப்பங்கள், பிரச்னைகள் நடந்தது. கயலுக்கு தீங்கு நினைத்த பல கதாபாத்திரங்கள் திருந்தி விட்டனர். எழிலின் அம்மா சிவசங்கரி மட்டும் தான் கயலுக்கு எதிராக நிற்கிறார். அவரோடு சேர்ந்து தீபிகாவுக்கு கயலுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட்டார்.

நேற்றைய எபிசோடில் தீபிகா சரியாக கயல் திருமணம் நடக்கும் சமயத்தில் மண்டபத்துக்கு வந்து எழில் மீது வீண் பழி சுமத்துகிறார். ``நான் கர்ப்பமா இருக்கேன்” என்கிறார். ஆனால் அங்கு இருக்கும் யாரும் அவரை நம்பவில்லை.

Kayal serial

பின்னர் யாரோ ஒருவர் தீபிகா தன் தந்தையிடம் கல்யாணத்தை நிறுத்த பிளான் போடும் காட்சிகளை வீடியோ எடுத்து, அனைவரிடமும் காட்டுவார். போலீஸும் அந்த இடத்துக்கு வந்துவிடும். தீபிகா கைது செய்யப்படுகிறார். அதன் பின்னர் திருமணம் நடக்கிறது. கயலில் கழுத்தில் எழில் தாலி கட்டிவிட்டார். இந்த காட்சிக்காக தான் பல கட்ட போராட்டங்கள் நடந்தது. பெரியம்மா பெரியப்பா திருந்தி விட்டனர். மூர்த்தி பொறுப்பாக மாறிவிட்டார். கயலுக்கு எதிராக சதி செய்த அனைவரும் மனம் மாறிவிட்டனர். எனவே சீரியல் முடிந்துவிடும் என பல ரசிகர்கள் கருதுகின்றனர்.

கயலாக நடிக்கும் நடிகை சைத்ரா ரெட்டியிடம் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பினர். ஆனால் சைத்ரா அப்படியெல்லாம் இல்லை, இன்னும் பல ட்விஸ்டுகள் கதையில் நடக்கும். இப்போதைக்கு கயல் முடிவுக்கு வராது என்று பதிலளித்துள்ளார். இன்று வெளியான ப்ரோமோவில் கயல்-எழிலுக்கு ஆரத்தி எடுக்கும் போது சங்கரி வில்லத்தனமாக முறைத்து கொண்டே உன்ன வாழவிட மாட்டேன் கயல், என் பையனுக்கு வேற ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறார்.

Kayal serial

இன்னொரு பக்கம் மூர்த்தி வலி தாங்க முடியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். கத்தி குத்து காயத்துக்கு சரியாக சிகிச்சை செய்து கொள்ளாமல் தன் தங்கை திருமணத்தை பார்க்க வந்துவிட்டார் மூர்த்தி. தீபிகாவின் முகத்திரையை கிழித்த அதே நபர், மூர்த்தியை யாரோ குத்தியதை அனைவரிடமும் சொல்கிறார். கயலின் ரியாக்‌ஷன் என்ன என்பது இன்றைய எபிசோடில் தெரியும்.  

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Bigg Boss Tamil 8: `அதைபோய் கிண்டல் பண்ணினா என்ன பண்றது?' - ரஞ்சித் குறித்து மனைவி பிரியா ராமன்

`பிக்பாஸ் தமிழ் சீசன் 8' பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் `நச்' கவனிப்பு பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் ரஞ்சித். இவருடைய கேம் பி... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 12: வெடித்த விவகாரம்; சர்ச்சையான அவார்ட் ; வெளியேறப்போவது யார்?

‘சின்னக் காலா இருந்தாலும் நல்லாயிருக்குடா’ என்று ‘காக்கா பிரியாணி’ நகைச்சுவைக் காட்சியில் விவேக் சொல்லுவார். அதைப் போலவே இன்றைய எபிசோடில் எப்படியோ கொஞ்சம் சுவாரசியம் வந்து விட்டது. இப்படியே வண்டியை நக... மேலும் பார்க்க

Serial Update: எதிர்நீச்சல் 2 - `இவருக்கு பதில் இவர்’ டு சன் தொடரில் இவர்களா?

`இவருக்கு பதில் இவர்’எதிர்நீச்சல் 2சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் `எதிர்நீச்சல்'. இந்தத் தொடருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடர் சில காரண... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: காதல் தோல்வி, கன்வின்ஸ் செய்த அர்னவ், மன அழுத்தம் - அன்ஷிதா குறித்து நண்பர்கள்

பிக் பாஸ் சீசன் 8-ல் மெதுவாக சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. மந்தமாகச் சென்றுகொண்டிருந்த எபிசோட்கள் மெல்ல கார சார உரையாடல், டாஸ்க் என நுழைந்திருக்கிறது.பிக்பாஸ் வீடுவிஜய் டிவியில் அக்டோபர் 6-ம் த... மேலும் பார்க்க

BB Tamil 8 Promo: `நீ செஞ்சிருக்கக் கூடாது' வில்லங்க பட்டம்; கலங்கி அழும் அன்ஷிதா

12-வது நாளான இன்றைய எபிசோடில் பல எதிர்பார்ப்புகளுக்கு பதில்கள் கிடைக்கும்.வீக்கெண்டுக்கு எபிசோடுக்கு முன்பாகவே... அதாவது விஜய் சேதுபதியின் எபிசோட் ஒளிபரப்பாகுவதற்கு முந்தைய நாள் அந்த வாரத்தில் நடந்த ட... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 11: `அழுகை; அழுகை; அழுகையோ அழுகை' - தர்ஷாவின் புலம்பல்; அன்ஷிதா நடித்த காதல் காட்சி

மன உளைச்சல் நேரும் சமயங்களில், பொதுவாக ஆண்களின் வெளிப்பாடு கோபமாக இருக்கும் என்றால், பெண்களின் எக்ஸ்பிரஷன் கண்ணீர் வழியாகத்தான் வெளிப்படும். எத்தனையோ நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களின் ... மேலும் பார்க்க