செய்திகள் :

RCB: "நான் பெங்களூரு அணியை தொடங்கியபோது..." - கோப்பையை வென்றது குறித்து விஜய் மல்லையா

post image

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையைத் தன் வசப்படுத்தியிருக்கிறது பெங்களூரு அணி.

RCB
RCB

கோப்பையை வெல்வது ஆர்.சி.பி அணியினருக்கு கிட்டத்தட்ட 18 வருடக் கனவு. அந்தக் கனவு நனவான ஆனந்தத்தில் போட்டி முடிந்த பிறகு கோலி உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆர்.சி.பி அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா பெங்களூரு அணியை வாழ்த்தி பதிவிட்டிருக்கிறார்.

அவர், "நான் ஆர்சிபியைத் தொடங்கியபோது, ஐ.பி.எல் கோப்பை பெங்களூருக்கு வரவேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இளம் வீரராக இருந்த கிங் கோலியைத் தேர்ந்தெடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

மேலும், அவர் 18 ஆண்டுகளாக ஆர்சிபியுடன் இருந்து வந்திருக்கிறார். யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் மற்றும் மிஸ்டர் 360 ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் கௌரவமும் எனக்குக் கிடைத்தது.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

அவர்கள் ஆர்சிபி வரலாற்றில் அழியாத பகுதியாக உள்ளனர். இறுதியாக, ஐ.பி.எல் கோப்பை பெங்களூருக்கு வந்துவிட்டது.

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும். ஆர்சிபி ரசிகர்கள் மிகச் சிறந்தவர்கள்; அவர்கள் ஐ.பி.எல் கோப்பையைத் தகுதியுடன் பெறுகிறார்கள். ஈ சாலா கப் பெங்களூரு வருதே!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

'விஜய் மல்லையா பேட்டி...'பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா 'ராஜ் சமானி' (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்க... மேலும் பார்க்க

Preity Zinta : 'நீங்க இல்லாம நாங்க இல்ல...' - நெகிழும் ப்ரீத்தி ஜிந்தா

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அந்த அணியின் வீரர்கள் பற்றியும் ரசி... மேலும் பார்க்க

IPL : 'இளம் வீரர்களுக்கு எதற்கு அத்தனை கோடிகள்?' - கவாஸ்கர் காட்டம்!

ஐ.பி.எல் இல் ஆடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க

TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி

டிஎன்பிஎல் கிரிக்கெட் கோவை எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கே... மேலும் பார்க்க

'இதெல்லாம் உங்களுக்கு பெருமையா சிவக்குமாரே? - பெங்களூரு கூட்ட நெரிசலும் நுண் அரசியலும்! - ஓர் அலசல்!

'பெங்களூரு கூட்ட நெரிசல்!'ஐ.பி.எல் யை ஆர்சிபி அணி வென்றதற்காக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான பேர் காயம்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின... மேலும் பார்க்க

Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் ... மேலும் பார்க்க