செய்திகள் :

அகமதாபாத் சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

அகமதாபாத்தில் உள்ள சர்வதேச விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக விமான நிலையங்கள், விமானங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்புவது வாடிக்கையாகி வருகின்றது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜெட்டா-அகமதாபாத் விமானத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டது.

ஜெட்டாவிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அனைத்து பயணிகளும்

இதையடுத்து உள்ளூர் காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தைச் சோதனையிட்டனர். அந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க

மணிப்பூா் புதிய முதல்வா் யாா்? பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளா் ஆலோசனை

இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா ... மேலும் பார்க்க

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ள வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடு... மேலும் பார்க்க

ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்

புது தில்லி: நாட்டில் ஸ்மாா்ட் மின் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக... மேலும் பார்க்க

டிரம்பின் முதல் பதவிக் காலத்தைபோல் நட்புறவு மேம்படும்: மோடி நம்பிக்கை

புது தில்லி: ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் முந்தைய பதவிக் காலத்தில் இரு நாடுகளிடையே நீடித்த நட்புறவை அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மேலும் வலுப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்’ என ... மேலும் பார்க்க