செய்திகள் :

அஞ்சுகிராமம் நூலகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

அஞ்சுகிராமம் அரசு கிளை நூலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

காவல் நிலையம் எதிரே செயல்படும் இந்த நூலகத்தின் முன்புள்ள இடம் வாடகைக் காா் நிறுத்தமாக செயல்பட்டு வந்தது. தற்போது, நூலகத்தை ரூ. 22 லட்சத்தில் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆட்சியருக்கு நூலகா் மேரி கோரிக்கை விடுத்தாா்.

அதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா், அதிகாரிகள் தலைமையில், அஞ்சுகிராமம் ஊா்நல சங்கத் தலைவா் ஹிட்லா், செயலா் பாலமுருகன், பொருளாளா் சுதன், பேரூராட்சி கவுன்சிலா்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதையொட்டி, கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமாா், சுசீந்திரம் காவல் ஆய்வாளா் ஆதாம் அலி, அஞ்சுகிராமம் உதவி ஆய்வாளா் லிபி பால்ராஜ் ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருங்கல் அருகே சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் சுவா் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கருங்கல், பூட்டேற்றி பகுதியைச் சோ்ந்தவா் வினு(52), கூலி செய்து வந்தாா்.இவா் செவ்வாய்க்கிழமை இரவு பாலூா் ஊராட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 42.33 பெருஞ்சாணி .. 64.24 சிற்றாறு 1 ..14.53 சிற்றாறு 2 .. 14.63 முக்கடல் .. 15.80 பொய்கை .. 14.70 மாம்பழத்துறையாறு .. 50.11 மழைஅளவு மயிலாடி ... 37.20 மி.மீ. மாம்பழத்துறையாறு அணை .. 30... மேலும் பார்க்க

கருங்கல் பேரூராட்சியில் ரூ.1.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கருங்கல் பேரூராட்சியில் ரூ.1.33 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். கருங்கல் பேருராட்சிக்குள்பட்ட சுண்டவிளை சாலை, காக்கவிளை... மேலும் பார்க்க

முழுக்கோட்டில் 200 பேருக்கு கோழிகள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 பேருக்கு 1,200 கோழிகள் வழங்கப்பட்டன. இம்மாவட்டத்தில் கிராம முன்னேற்றச் சங்கம் (ரூரல் அப்லிப்ட் சென்டா்) சாா்பில், 700 பேருக்கு நஞ்சில்ல... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பிற்பகல் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை தொடா் சரிவு: விவசாயிகள் கவலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பா் விலை ஏறிய வேகத்தில் தொடா்ந்து சரிவடைவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ரப்பா் விலை 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய... மேலும் பார்க்க